காவிரி நீர் பகிர்வு தொடர்பாக டெல்லியில் காணொலி வாயிலாக நடைபெற்ற காவிரி நீர் ஒழுங்குமுறை குழுக் கூட்டத்தில், தமிழகத்திற்கு தற்போது தண்ணீர் திறந்துவிட முடியாது என்று கர்நாடகா தெரிவித்துள்ளது. காவிரி நீர் பகிர்வு விவகாரம் பல ஆண்டுகளாக தமிழகத்துக்கும் கர்நாடகாவுக்கும் இடையே நீடித்து வரும் பிரச்சினையாக உள்ளது. மழை நன்றாக பெய்தால் உபரி நீரை திறந்து விடும் கர்நாடகா. பருவமழை குறைவாக இருக்கும் ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய நீரை தருவதில்லை. […]

