லாட்டரி அடிக்க வேண்டும் என்பது அனைவரின் விருப்பம். ஆனால் எல்லோருடைய கனவுகளும் நனவாக வேண்டும் என்பது அவசியமில்லை. சிலருக்கு அதிர்ஷ்டம் உண்டு. ஒருவருக்கு லாட்டரி அடித்தது தெரிந்தால் அவருக்கு எப்படியிருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். ஆனால், லாட்டரி சீட்டைத் தேடத் தொடங்கும் போது, அது கிடைக்காமல் போனால் அவரது நிலை என்னவாகும்.
அமெரிக்காவில் ஒருவருக்கு அப்படித்தான் நடந்திருக்கிறது. மதுக்கடையில் 25 கோடி ரூபாய் லாட்டரி சீட்டை மறந்துவிட்டார் அவர். தனக்கு லாட்டரி அடித்தது தெரிந்ததும் பைத்தியம் பிடித்தவர் போல் ஓடி அங்கு வந்தார். டெய்லி மெயில் படி, மாசசூசெட்ஸில் வசிக்கும் பால் லிட்டில் ஒரு மெக்கானிக் மற்றும் டீசல் என்ஜின்கள் தயாரிப்பில் வேலை செய்கிறார். ஜனவரியில், அவர் ஒரு லாட்டரி சீட்டை வாங்கினார். ஆனால் அதை தவறுதலாக மதுக்கடையில் விட்டுவிட்டார். அதை அங்கே வேலை பார்த்த எழுத்தர் கார்லி நூன்ஸ் பாக்கெட்டில் வைத்துக் கொண்டார்.
எங்கேயாவது விழுந்திருக்கலாம் என்று நினைத்த அவர் பின்னர் மறந்து போனார். ஆனால் மாலையில், லாட்டரி அலுவலகத்தில் இருந்து அழைப்பு வந்தது. அவருக்கு 3 மில்லியன் டாலர் பரிசு விழுந்திருப்பதாக சொல்லப்பட்டது. அதாவது சுமார் 25 கோடி. இதைக் கேட்டதும் அவரின் கண்கள் இருண்டன. லாட்டரி நிறுவனத்திடம் எதுவும் சொல்லாமல், உடனடியாக மதுக்கடைக்கு ஓடினார் பால் லிட்டில். அங்கு சென்று காசாளரிடம் விசாரித்தபோது, அவர் அதுபற்றி தெரியாது என்றதும், ஏமாற்றத்துடன் வீடு திரும்பினார் பால்.
ஆனால் காசாளர் ஒரு தந்திரம் செய்தார். லாட்டரி சீட்டை எடுத்துக் கொண்டு பணத்தை எடுக்க வந்தார். ஆனால் சீட்டு கிழிந்து எரிந்த நிலையில் இருந்ததை பார்த்த லாட்டரி அதிகாரிகள் உடனடியாக சந்தேகமடைந்தனர். காசாளர் நூன்ஸ் ஏதேதோ சொல்லி தன்னை தற்காத்துக் கொண்டார். ஆனால் அதிகாரிகள் அதற்கு சம்மதிக்காமல் அந்த நபரை வீடியோ எடுத்தனர். பின்னர், உண்மையான வெற்றியாளர் வந்ததும், அவர் கைது செய்யப்பட்டார். உண்மையான வெற்றியாளரான மெக்கானிக்குக்கு அந்த பரிசுத் தொகை வழங்கப்பட்டது.