மனைவியை கொடுமைப்படுத்திய கணவருக்கு 3 ஆண்டு சிறை..!! – குற்றவியல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

law

தூத்துக்குடி மாவட்டத்தில், மனைவியை கொடுமைபடுத்திய கணவனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.


தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நடு கூட்டுடன்காடு பகுதியைச் சேர்ந்தவர் சிவா (34) என்பவர் கடந்த 2014 ஆம் தனது மனைவியை கொடுமைப்படுத்திய வழக்கில் புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் சிவாவை கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணையானது, தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் 11 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில், நேற்று (ஜூன் 28) இறுதி விசாரணை நடைபெற்றது. அப்போது, குற்றம்சாட்டப்பட்ட சிவா, மனைவி மீது தாக்குதல் நடத்தியது சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாகவும், அவர் குற்றவாளி எனவும் நீதிபதி விஜய் ராஜ்குமார் தீர்ப்பளித்தார். தொடர்ந்து, குற்றவாளி சிவாவுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 500 அபராதமும் விதித்தும் நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த தீர்ப்பு குடும்ப வன்முறைகளுக்கு எதிரான ஒரு முக்கியமான முன்னுதாரணமாக பார்க்கப்படுகிறது. இந்த வழக்கின் தீர்ப்பை தொடர்ந்து, வழக்கைச் சிறப்பாக கையாண்ட அப்போதைய புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சாந்தகுமாரி, குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர நீதிமன்றத்தில் வாதிட்ட உதவி அரசு தரப்பு வழக்கறிஞர் கண்ணன், முதல் நிலை காவலர் ஆனந்த ஜோதி ஆகியோருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டுகள் தெரிவித்தார்.

Read more: தமிழகத்தில் தரமற்ற பாராசிட்டமால் மருந்துகள் விற்கப்படவில்லை..!! – மருந்து கட்டுப்பாட்டுத் துறை விளக்கம்

Next Post

பேருந்து மீது லார் மோதி பயங்கர விபத்து.. 19 பேர் பரிதாபமாக உயிரிழப்பு.. பலர் காயம்..!!

Sun Jun 29 , 2025
பேருந்து மீது லாரி மோதி கோர விபத்திற்குள்ளானதில் 19 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எகிப்து நாட்டின் மினொபியா மாகாணம் அர்ப் அல் சன்பாசா கிராமத்தில் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் 22 தொழிலாளர்கள் பயணம் செய்தனர். நேற்று காலை இந்த பேருந்து அஷ்மொன் பகுதியில் சென்ற போது சாலையில் எதிரே வேகமாக வந்த லாரி, பேருந்து மீது மோதியது. இந்த கோர விபத்தில் […]
accident

You May Like