ராஜஸ்தான் (Rajasthan) மாநிலம் பலோடி மாவட்டத்தில் ஒரு நபர் தனது மனைவியும் இன்ஸ்டாகிராம் இன்ஃபளுயன்சருமான அனாமிகா பிஷ்னோயை குடும்ப தகராறில் சுட்டுக் கொன்றார். இந்த கொடூர சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் பிரபலமாக இருப்பவர் அனாமிகா பிஷ்னோய். இவரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இன்ஸ்டாகிராம் பயனர்கள் பின்தொடர்ந்து வருகிறார்கள். இவர் தனது கடையில் இருந்த போது கணவரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். பகல் பொழுதில் நடைபெற்ற இந்த […]

கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் மனைவி மற்றும் மாமியாரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் இரண்டு பெண்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த விமல் குமார் என்பவர் மது புழக்கத்திற்கு அடிமையானவர் என தெரிகிறது. இவர் அடிக்கடி மது குடித்து விட்டு வந்து தனது மனைவியிடம் தகராறு செய்திருக்கிறார். இதனால் அவரை விட்டுப் […]

கணவனை ஏமாற்றி விட்டு கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்து வந்த பெண்ணை, கள்ள காதலன் கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் கர்நாடக மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கர்நாடக மாநிலத்தில் உள்ள சிக்கபல்லாப்பூர் டவுனை சேர்ந்த சாம்ராஜ் பேட்டையில் தீபா (40) என்பவர் தனது கணவர் மற்றும் 2 மகன்களுடன் வசித்து வந்தார். வீட்டின் அருகில் உள்ள பேக்கரிக்கு தீபா அடிக்கடி சென்று வந்த நிலையில், அங்கு வேலை செய்த திவாகர்(37) […]

கர்நாடக மாநிலத்தில் கணவர் கண் முன்னே மனைவி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக பெண் கொடுத்த புகாரின் பேரில் 6 பேர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கொடூர சம்பவம் கர்நாடக மாநிலத்தின் கொப்பல் என்ற இடத்தில் நடைபெற்றுள்ளது. பிப்ரவரி 8ஆம் தேதி அந்தப் பகுதியைச் சேர்ந்த 21 வயது இளம் பெண் தனது கணவருடன் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். […]

ரஷ்யாவில் பெண்ணொருவர், இறந்த தனது கணவனின் உடலை மம்மியாக்கி, அதனுடன் 4 வருடங்கள் உறங்கியதாக கூறப்படுகிறது. மேலும் பல அமானுஷ்ய சடங்குகளை செய்ததாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவில் ஸ்வெட்லானா(50) என்ற பெண்ணின் கணவர் விளாடிமிர்(49) மர்மமான முறையில் தனது பெரிய வீட்டில் இறந்தார். டிசம்பர் 2020இல் கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாட்டால் சண்டை வந்தது. அப்பொழுது அவர் மனைவி விளாடிமிரைப் பார்த்து கத்தி, பின்பு அவருக்கு மரணம் நிகழட்டும் என்று சபித்திருக்கிறார். […]

திருச்சியில் உள்ள திருவெறும்பூர் பகுதியில், கணவனை விட்டுவிட்டு, கணவன் கட்டிய தாலியுடன், காதலனுடன் ஓட்டம் பிடித்தார் அவரது மனைவி. ஆசை மனைவி காணாமல் திகைத்த அந்த கணவர், உண்மையறிந்து நொந்து போனார். இந்த சம்பவம் திருவெறும்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த செப்டம்பர் 17ஆம் தேதி, துவாக்குடி ராவுத்தன்மேடு பகுதியைச் சேர்ந்த சுகன்யாவுக்கும், திருவெறும்பூரில் உள்ள காட்டூர் பாத்திமாபுரத்தைச் சேர்ந்த ஜெயபிரபுவுக்கும் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கடந்த மாதம் […]

இரண்டாவது திருமணம் செய்ய விரும்பிய கணவன், முதல் மனைவி மறுப்பு தெரிவித்ததால், அவருக்கு மொட்டை அடித்து, தெருத்தெருவாக இழுத்துச் சென்ற சம்பவம் ஆந்திராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆந்திர சினிமாவின் துணை நடிகரான அவரை போலீசார் தேடி வருகின்றனர். ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள பெடகொண்டேபுடி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் அபிராம் என்கிற ராம்பாபு (33). ஆந்திர சினிமாவில் துணை நடிகராக பணிபுரிந்து வருகிறார். தன்னுடன் பணியாற்றிய ஆஷா […]

டெல்லியில் 40 வயது மனைவியை, கள்ளத்தொடர்பில் ஈடுபட்டுள்ளதாக சந்தேகித்து, அவரது கணவர் உளியை வைத்து தாக்கி கொடூரமாக கொலை செய்திருக்கிறார். பின்னர் அவரது இரண்டு குழந்தைகளையும் விட்டுச் சென்று தப்பியோடிவிட்டார். காவல்துறையினர் குற்ற செயலில் ஈடுபட்ட அந்த கணவரை கைது செய்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். டெல்லி புராரி பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை காலை 4.30 மணி அளவில், காவல்துறையினருக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. அந்த அழைப்பில் சத்ய […]

கர்நாடக மாநிலத்தில் 7 வருடங்களுக்கு முன்பு தொலைந்த கணவனை தேடிச் சென்ற மனைவிக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. தன் கணவர் திருநங்கையாக மாறியதை கண்ட அவர், செய்வதறியாது திகைத்தார். திருநங்கையாக மாறி அந்த கணவரிடம், மனைவியுடனும், குழந்தைகளுடனும் சேர்ந்து வாழக்கோரி போலீசார் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. கர்நாடகா மாநிலம், ராம் நகரைச் சேர்ந்த ஐஜுர் பகுதியில், கடந்த 2017ஆம் ஆண்டு, நிதி சவால்களை சமாளிக்க முடியாமல் தனது மனைவி மற்றும் […]

திருச்சியில் வசித்து வரும் பெண் ஒருவர், தனது முன்னாள் காதலன், அவருடன் எடுத்த தனிமையில் இருக்கும் புகைப்படங்களை கணவர் மற்றும் உறவினர்களுக்கு அனுப்பியதாக போலீசில் புகார் அளித்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி மணப்பாறையில் உள்ள மருங்காபுரி தாலுகாவில் வசித்து வரும் 22 வயது பெண், தனது திருமணத்திற்கு முன்பு மருதப் பட்டியைச் சேர்ந்த 24 வயது இளைஞரான கருணாகரன் என்பவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. […]