ரயில்வேயில் 3058 டிக்கெட் கிளார்க் பணியிடங்கள்.. விண்ணப்பிக்க இன்றே கடைசி தேதி..!!

railway recruitement 1

தேசிய அளவில் இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 3,058 தொழில்நுட்பம் அல்லாத பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க இன்று (நவம்பர் 27) கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், சென்னை ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியத்தின் (RRB Chennai) அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.


நிரப்பப்படும் பணியிடங்கள்: இந்திய ரயில்வேயில் தொழில்நுட்பம் அல்லாத பதவிகளில் கமர்சியல் உடன் டிக்கெட் கிளார்க், அக்கவுண்ஸ் கிளார்க் உடன் டைப்பிஸ்ட், ஜூனியர் கிளார்க் உடன் டைப்பிஸ்ட் மற்றும் டிரைய்ன் கிளார்க் ஆகிய பதவிகளில் நிரப்பப்படுகிறது.

வயது வரம்பு: குறைந்தபட்சம் 18 முதல் 30 வயது வரை இருக்கலாம்.  2026 ஜனவரி அடிப்படையில் வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வுகள் பின்பற்றப்படும்.

கல்வித்தகுதி:

* விண்ணப்பதார்கள் கட்டாயம் 12-ம் வகுப்பை 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

* அக்கவுண்ஸ் கிளார்க் உடன் டைப்பிஸ்ட் மற்றும் ஜூனியர் கிளார்க் உடன் டைப்பிஸ்ட் ஆகிய 2 பதவிகளுக்கு மட்டும் ஆங்கிலம் அல்லது இந்தியில் தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: ரயில்வே வேலைவாய்ப்பிற்கு 2 கட்ட தேர்வு முறை பின்பற்றப்படுகிறது. கணினி வழியில் தேர்வு நடைபெறும், டைப்பிஸ்ட் பதவிகளுக்கு திறன் தேர்வு நடைபெறும். அதனைத்தொடர்ந்து, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

சம்பளம்: தேர்வாகும் நபர்களுக்கு அடிப்படையில் சம்பளம் ரூ.19,900 முதல் 21,700 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எப்படி விண்ணப்பிப்பது? தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் சென்னை ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியத்தின் https://www.rrbchennai.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்.

Read more: Flash: 3 மணி நேரத்தில் உருவாகிறது டிட்வா புயல்..! வானிலை ஆய்வு மையம் அலர்ட்..

English Summary

3058 Ticket Clerk Vacancies in Railways.. Today is the last date to apply..!!

Next Post

வெள்ளம், நிலச்சரிவுகளை தொடர்ந்து.. இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..! சுனாமி எச்சரிக்கையா?

Thu Nov 27 , 2025
இந்தோனேசியாவின் சுமத்திரா தீவை 6.3 என்ற அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் உலுக்கியுள்ளது. ஏற்கனவே கடும் மழை, திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக 25-க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ள நிலையில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் சிமியூலு தீவில் 25 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது, மேலும் சேதம் மற்றும் சுனாமி எச்சரிக்கை குறித்த உடனடி தகவல்கள் எதுவும் இல்லை. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி ஏற்படுவதற்கான “எந்த அச்சுறுத்தலும் இல்லை” […]
indonesia earthquake 275630958 16x9 0 1 1

You May Like