365 நாட்கள் வேலிடிட்டி.. தினமும் 2 ஜிபி டேட்டா.. BSNL-ன் மலிவான ரீசார்ஜ் திட்டம்…

அரசுக்கு சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனமான BSNL நிறுவனம், மலிவு விலையில் பல ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கி வருகிறது.. மற்ற நிறுவனங்கள் 3 மாதங்கள் செல்லுபடியாகும் திட்டங்களின் விலையில், BSNL 1 ஆண்டு செல்லுபடியாகும் ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்குகிறது. அந்த வகையில் BSNL இன் ரூ.797 ப்ரீபெய்ட் திட்டம் அதன் நன்மைகளுடன் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களுக்கு கடுமையான போட்டியை அளிக்கிறது. BSNL இந்த திட்டம் குறித்து விரிவாக பார்க்கலாம்..


பிஎஸ்என்எல் ரூ.797 இந்த திட்டத்தில், தினமும் 2ஜிபி டேட்டா வசதி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் 365 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் வரம்பற்ற உள்ளூர் மற்றும் எஸ்டிடி குரல் அழைப்பு வழங்கப்படுகிறது. அதிவேக டேட்டா வரம்பு முடிந்ததும், டேட்டா வேகம் 80kbps ஆக குறைகிறது. இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. இப்போது முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த திட்டத்தில் உள்ள அனைத்து இலவசங்களின் பலனும் 60 நாட்களுக்கு மட்டுமே கிடைக்கும்.

ஆனால் ரூ.800-க்கு குறைவான திட்டங்களில் மற்ற நிறுவனங்கள் 3 மாதங்கள் மட்டுமே வேலிடிட்டி கொடுக்கின்றன.. உதாரணமாக ஏர்டெல்லின் 779 ரூபாய் தினசரி 1.5 ஜிபி டேட்டா ப்ரீபெய்ட் திட்டத்தில் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் 90 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்பட்டுள்ளது. இது குரல் அழைப்புக்கு வரம்பற்ற அழைப்பை வழங்குகிறது. எஸ்எம்எஸ்களுக்கு, இந்த திட்டத்தில் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. மற்ற நன்மைகளைப் பற்றி பேசுகையில், இந்த திட்டத்தில் அப்பல்லோ 24|7 வட்டத்தில் ரூ.100 கேஷ்பேக் கிடைக்கிறது, இலவச ஹெலோட்யூன்ஸ், விங்க் மியூசிக் இலவசம் மற்றும் ஃபாஸ்டேக் ரீசார்ஜ்.

அதே போல் ஜியோ நிறுவனம், 783 ரூபாயில் 84 நாட்கள் செல்லுபடியாகும் ரீசார்ஜ் திட்டத்த்தை வழங்குகிறது. இந்த திட்டத்தில் ஒவ்வொரு நாளும் 1.5 ஜிபி டேட்டா கிடைக்கிறது, இது மொத்தம் 126 ஜிபி டேட்டாவில் உள்ளது. இந்த திட்டத்தில் வரம்பற்ற குரல் அழைப்பு வழங்கப்படுகிறது, இதில் உள்ளூர் மற்றும் எஸ்டிடி அழைப்புகளும் அடங்கும். இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. மற்ற நன்மைகளைப் பற்றி பேசுகையில், டிஸ்னி + ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா இதில் 3 மாதங்களுக்கு வழங்கப்படுகிறது.

RUPA

Next Post

நெருங்கும் தீபாவளி..! பட்டாசு கொண்டு செல்ல தடை..! மீறினால் ஜெயில்..! ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை..!

Fri Sep 23 , 2022
ரயில்களில் தடையை மீறி பட்டாசு எடுத்துச் சென்றால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் எச்சரித்துள்ளது. ரயில்களில் பட்டாசுகள், டீசல், பெட்ரோல் போன்ற எளிதில் தீப்பற்றும் பொருட்களை எடுத்துச் செல்வதற்கான தடை அமலில் உள்ளது. ஆனாலும், தீபாவளி பண்டிகை நெருங்கும்போது வியாபாரிகள் மற்றும் பயணிகள் பட்டாசுகளை மறைத்து எடுத்துச் செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். அப்படி, ரயில்களில் பட்டாசு கொண்டு செல்வதை தடுப்பதற்காக ரயில் நிலையங்களில் ஆண்டுதோறும் […]
நெருங்கும் தீபாவளி..! பட்டாசு கொண்டு செல்ல தடை..! மீறினால் ஜெயில்..! ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை..!

You May Like