#சீனா :தீ விபத்தில் 38 நபர்கள் பலி.. அலச்சியத்தினால் அடிக்கடி ஏற்படும் விபத்து..!

நம் நாட்டின் அண்டை நாடான சீனாவில் உள்ள ஹெனான் மாகாணத்தில் அமைந்துள்ள ஒரு தொழிற்சாலையில், நேற்று முன் தினம் வேலை நடைபெற்று கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக திடீரென பயங்கர தீ பற்றி விபத்து ஏற்பட்டுள்ளது.


இதனை தொடர்ந்து தகவல் அறிந்து, அந்த பகுதிக்கு 63 தீயணைப்பு வாகனங்களும் அதனுடன் 240 தீயணைப்பு துறை வீரர்களும் வந்தனர். கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் போராடிய பின்னரே தீயை அணைத்துள்ளனர். 

இருந்த போதிலும் இதில் ஏற்பட்ட தீ விபத்தில் 38 நபர்கள் பலியாகி உள்ளனர். மேலும் பலர் பலத்த காயமடைந்துள்ளனர். தீ விபத்துக்கான காரணம் பற்றி எதுவும் தெரியவில்லை. இதனையடுத்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

இவ்வாறு அந்த பகுதியில் தீ விபத்து அதிகம் ஏற்பட்டு வருகிறது. இதனால் பல உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. இந்த நிலையில் சந்தேகம் எழுந்ததன் பேரில் சிலரை பிடித்து, காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். 

1newsnationuser5

Next Post

குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்..!! இந்த மாவட்டத்தில் தொடர்ந்து 6 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை..!!

Wed Nov 23 , 2022
கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, திருவண்ணாமலையில் நகரின் உள்பகுதியில் இயங்கும் மதுக்கடைகளுக்கு டிசம்பர் 2ஆம் தேதி முதல் டிசம்பர் 7ஆம் தேதி வரை 6 நாட்கள் தொடர் விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகைத் தீப திருவிழாவைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் பல மாவட்டங்களில் இருந்தும் திருவண்ணாமலையில் குவிவார்கள். கார்த்திகை தீபத் திருவிழாவுக்கான கொடியேற்ற விழா இம்மாதம் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. நவம்பர் 30ஆம் […]
large tasmac 56169

You May Like