#கர்நாடகா : அருவியில் செல்பி எடுக்க முயன்ற பெண்கள் 4 பலி..!

கர்நாடகா எல்லைப் பகுதியில் அமைந்துள்ள கிடா வாடா என்கிற அருவிக்கு சுமார் 50 பெண்கள் சுற்றுலா சென்றுள்ளனர். அதில் 5 பெண்கள் அருவியின் அருகே சென்று செல்பி எடுக்க முயன்றுள்ளனர். 


அப்போது திடீரென அருவிக்குள் தவறி விழுந்து விட்டனர். விழுந்ததில் 4 பெண்கள் அருவியில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். இதனையடுத்து மேலும் ஒரு பெண் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

பெலகாவி மாவட்ட பகுதியில் இருந்து சுமார் 40 பெண்கள் கொண்ட குழு நேற்று கிடாவாடா பகுதியிக்கு சுற்றுலாவாக அருவிக்கு சென்றிருந்தது. இந்த நிலையில் அருவியில் மூழ்கி 4 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 

உயிரிழந்த பெண்கள் ருக்காஷர் பிஸ்டி (20),  உஜ்வாலை சேர்ந்த ஆசியா முஜாவர் (17), ஜபாத் காலனியில் வசிக்கும் தஸ்மியா (20) அனகோலாவில் வசித்த குட்ஷியா ஹசம் படேல் (20), ஆகிய நபர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இவர்களின் உடல்கள் மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டது. 

1newsnationuser5

Next Post

FIFA World Cup Qatar 2022..!! கால்பந்து ஜாம்பவானின் சாதனையை சமன் செய்த மெஸ்ஸி..!!

Sun Nov 27 , 2022
உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் அர்ஜென்டினா அணிக்காக அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ஜாம்பவான் டியாகோ மரடோனாவுடன் மெஸ்ஸி 2-வது இடத்தை பகிர்ந்துள்ளார். உலகக்கோப்பை 2022-க்கான கால்பந்து போட்டி கத்தாரில் நடந்து வருகிறது. இதில், நேற்று நள்ளிரவில் லுசைல் ஸ்டேடியத்தில் நடந்த ‘சி’ பிரிவு ஆட்டம் ஒன்றில் அர்ஜென்டினா மற்றும் மெக்சிகோ அணிகள் மோதின. பரபரப்பாக தொடங்கிய இந்த ஆட்டத்தில் முதல் பாதியில் எந்த அணியினரும் கோல் எதுவும் அடிக்கவில்லை. […]
FIFA World Cup Qatar 2022..!! கால்பந்து ஜாம்பவானின் சாதனையை சமன் செய்த மெஸ்ஸி..!!

You May Like