இன்றைய காலகட்டத்தில், பல இளைஞர்களிடம் “எனக்குக் கிடைக்காதது வேறு யாருக்கும் கிடைக்கக் கூடாது” என்ற மனநிலை அதிகரித்து வருவது கவலைக்கிடமான ஒன்றாக உள்ளது. சிறுவயதிலிருந்தே பகிர்ந்து கொள்வது, விட்டுக் கொடுப்பது, பிறரின் உணர்வுகளை மதிப்பது போன்ற நல்ல பண்புகளை பெற்றோர்கள் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்பது மிகவும் அவசியம். இத்தகைய மதிப்புகள் குறைவதால்தான் காதல், கோபம், பழிவாங்கும் மனப்பான்மை உள்ளிட்ட காரணங்களால் பல கொடூரமான சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன என்று சமூக […]

கர்நாடக மாநிலம் சிக்மகளூரு மாவட்டத்தில் பெற்றோரே பணத்திற்காக தங்கள் மகளை வெளிநாட்டில் உள்ள விபச்சார கும்பலிடம் விற்றதாக வெளியாகியுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். மல்லேனஹள்ளி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த ராஜசேகர் (50) மற்றும் அவரது மனைவி கிராந்தி (48) ஆகியோர் ஹக்கி-பிக்கி பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள். வனப்பகுதிகளில் கிடைக்கும் அரிய மூலிகைகளை சேகரித்து விற்பனை செய்வதே இவர்களின் தொழிலாகும். இதன் […]

தற்போது தங்கத்தின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே. தங்கம் என்பது வெறும் அலங்காரப் பொருள் மட்டுமல்ல, முதலீட்டிற்கு மிகவும் உகந்த ஒரு உலோகமும் கூட. அனைத்து உலோகங்களிலும், வங்கிகளில் தங்கத்தின் மீது ஒரு தனி மோகம் உள்ளது.. ஆனால், தங்கத்திற்கான இத்தகைய அதிகரித்து வரும் தேவைக்கு மத்தியில், இந்தியாவில் எந்த மாநிலத்தில் உண்மையில் அதிக தங்கம் உள்ளது? என்று எப்போதாவது யோசித்தது உண்டா? […]

கர்நாடகாவின் பல்லாரி மாவட்டத்தில் வியாழக்கிழமை மாலை காங்கிரஸ் மற்றும் கல்யாண ராஜ்ய பிரகதி கட்சி (கே.ஆர்.பி.பி) சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவாளர்களுக்கு இடையே வன்முறை மோதல் வெடித்தது. இந்தச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார். உயிரிழந்தவர் 28 வயதுடைய காங்கிரஸ் கட்சித் தொண்டர் ஆவார். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, கூடுதல் படைகள் குவிக்கப்பட்டுள்ளன. ஜனவரி 3 அன்று நடைபெறவிருந்த வால்மீகி சிலை திறப்பு நிகழ்ச்சிக்கு முன்னதாக, பல்லாரி நகர […]

மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு இன்னும் முனைப்புடன் செயல்பட்டு மேகதாது அணை கட்டும் முயற்சியை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது. கடந்த 50 ஆண்டுகளாக, தமிழகம் – கர்நாடகா இடையே காவிரி நதிநீர் பங்கீட்டில் பிரச்னை நீடித்து வருகிறது. மழைக்காலங்களில் உபரியாக வரும் நீரை மட்டும் காவிரியில் திறந்துவிட்டு, தமிழகத்திற்கான பங்கீட்டை அளவுக்கு […]