41 MLA-க்கள் நேரடி தொடர்பு..! கைதாகிறாரா மம்தா..? பாஜக தலைவரின் பேச்சால் அரசியலில் பரபரப்பு..!!

மேற்குவங்க பாஜக தலைவர் பேசியிருக்கும் கருத்தால், திரிணாமுல் காங்கிரஸில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


மேற்கு வங்கத்தில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் பார்த்தா சட்டர்ஜி ஆசிரியர் பணி நியமன ஊழல் வழக்கிலும், மூத்த தலைவர் அனுப்பிரதா மோந்தல் கால்நடை கடத்தல் வழக்கிலும் கைது செய்யப்பட்டு வழக்குகளை எதிர்கொண்டு வருகின்றனர். இதனால், அக்கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையே வார்த்தைப் போர் நடைபெற்று வருகிறது. குறிப்பாக, மம்தா பானர்ஜி பாஜகவை தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகிறார்.

41 MLA-க்கள் நேரடி தொடர்பு..! கைதாகிறாரா மம்தா..? பாஜக தலைவரின் பேச்சால் அரசியலில் பரபரப்பு..!!

இதற்கிடையே, கொல்கத்தாவில் கடந்த செப். 8ஆம் தேதி நடைபெற்ற திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் பேசிய மம்தா, ”2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவோம். பீகார் முதல்வர் நிதிஷ்குமார், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன் உடன் இணைந்து பணியாற்றுவோம்” என தெரிவித்திருந்தார்.

மேற்குவங்க பாஜக தலைவர் சுகந்தா மஜூம்தார்

இந்நிலையில், மேற்குவங்க பாஜக தலைவர் சுகந்தா மஜூம்தார் மற்றும் அக்கட்சியின் மூத்த தலைவரும், பாலிவுட் நடிகருமான மிதுன் சக்கரவர்த்தி ஆகியோர் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றனர். அப்போது மாநில தலைவர் சுகந்தா மஜூம்தார் பேசுகையில், “திரிணாமுல் கட்சியின் சில அமைச்சர்கள் உள்பட முக்கிய தலைவர்கள் மட்டுமே குறிப்பிட்ட சில காலத்திற்கு பிறகு சிறைக்கு வெளியே இருப்பார்கள். மீதம் உள்ளவர்கள் சிறையில் இருப்பார்கள். பெரும்பாலான அமைச்சர்கள் சிறைக்கு சென்றுவிட்டால், யார் ஆட்சியை நடத்துவார்கள்?. டிசம்பருக்குள் இப்படி ஒரு நிலை வரும் என்று நாங்கள் நினைக்கிறோம். சிறைக்குச் செல்லும் அமைச்சர்களில் முதல்வரும் இருப்பாரா என்று தெரியவில்லை. ஒருவேளை முதல்வரும் சிறைக்கு செல்லும் நிலை வரலாம். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் 41 MLA-க்கள் பாஜகவின் உயர்மட்ட குழுவுடன் நேரடித் தொடர்பில் இருக்கின்றனர்” என்றார்.

41 MLA-க்கள் நேரடி தொடர்பு..! கைதாகிறாரா மம்தா..? பாஜக தலைவரின் பேச்சால் அரசியலில் பரபரப்பு..!!

பின்னர் மிதுன் சக்கரவர்த்தி பேசுகையில், “திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் 21 MLA-க்கள் என்னுடன் நேரடி தொடர்பில் உள்ளனர். இதை நான் முன்னரும் கூறினேன். இப்போது திரும்பவும் கூறியுள்ளேன். இந்த கருத்தில் நான் உறுதியாய் நிற்கிறேன். அதற்கான நேரம் வரும் வரை அவர்களைக் காத்திருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்றார். சுகந்தா மஜூம்தார், மிதுன் சக்கரவர்த்தி ஆகியோரின் பேச்சால் மேற்கு வங்க அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

CHELLA

Next Post

ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது தேடி வந்த 500 ரூபாய் நோட்டுக்கட்டு….

Wed Sep 28 , 2022
கேரளாவில் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த முதியவரைத் தேடி வந்த 500 ரூபாய் நோட்டுக்கட்டுக்களைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். கேரளாவின் ஆற்றிங்கல் என்ற இடத்தில் உள்ள ஆற்றில் முதியவர் ஒருவர் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது தெர்மாக்கோல் அட்டைப் பெட்டி ஒன்று மிதந்து வந்தது. அதை எடுத்து பிரித்து பார்த்துள்ளார். அந்த பெட்டி முழுக்க 500 ரூபாய் நோட்டுக்கட்டுக்கள் . எல்லாருக்கும் ஒரு ஆசையிருக்கும் நம் வாழ்க்கையில் இப்படி ஒரு புதையலோ , ஒரு […]
kerala two bundles floating in the river with fake rupees note

You May Like