18 வயது மேற்பட்ட நபர்களுக்கு அரசின் ரூ.5 லட்சம் கடனுதவி…! எப்படி பெறுவது…? இவர்களுக்கு மட்டுமே…!

கோவிட்‌ 19 பெருந்தொற்றுப்‌ பரவலால்‌ வெளிநாட்டில்‌ வேலையிழந்து நாடு திரும்பிய புலம்பெயர்‌ தமிழர்களுக்கு வாழ்வாதாரத்துக்கான வாய்ப்புகளை வழங்கும்‌ நோக்குடன்‌ தமிழ்நாடு அரசு புலம்‌ பெயர்ந்தோர்‌ வேலைவாய்ப்பு உருவாக்கும்‌ திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின்‌ கீழ்‌ வெளிநாடுகளில்‌ குறைந்தது 2 ஆண்டுகள்‌ பணி புரிந்து கோவிட்‌ 19 பெருந்தொற்றுப்‌ பரவலால்‌ வேலையிழந்து நாடு திரும்பிய தமிழர்கள்‌ சுயதொழில்‌ தொடங்க மானியத்துடன்‌ இணைந்து கடனுதவி பெற்றுப்‌ பயன்‌ பெறலாம்‌.


அவர்கள்‌ கோவிட்‌ 19 பெருந்தொற்றுப்‌ பரவலினால்‌ 01.01.2020 அன்று அல்லது.அதற்குப்‌ பிந்தைய நாட்களில்‌ தமிழ்நாடு திரும்பியிருக்க வேண்டும்‌. குறைந்தது எட்டாம்‌ வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்‌. வயது 18 க்கு மேலாகவும்‌, 55 க்கு மிகாமலும்‌ இருக்க வேண்டும்‌. வணிக மற்றும்‌ சேவைத்‌ தொழில்‌ திட்டங்களுக்கு அதிகபட்ச திட்ட மதிப்பீடு ரூ.5 லட்சமாகவும்‌ உற்பத்தித்‌ தொழில்‌ திட்டங்களுக்கு ரூ.15 லட்சமாகவும்‌ இருக்கும்‌.

பயனாளர்‌ தம்‌ பங்காக, பொதுப்‌ பிரிவுப்‌ பயனாளர்கள்‌ எனில்‌ திட்டத்‌ தொகையில்‌ 10% மற்றும்‌ பெண்கள்‌, பட்டியலினத்தவர்‌, பழங்குடியினர்‌, பிற்பட்ட வகுப்பினர்‌, மிகவும்‌ பிற்பட்ட வகுப்பினர்‌, சிறுபான்மையினர்‌, திருநங்கையர்‌, மாற்றுத்திறனாளிகள்‌ உள்ளிட்ட சிறப்புப்‌ பிரிவினர்‌ எனில்‌ 5 % செலுத்த வேண்டும்‌. மீதமுள்ள தொகை வங்கிக்‌ கடனாக வழங்கப்படும்‌. அரசு, திட்டத்‌ தொகையில்‌ 25% அதிகபட்சம்‌ ரூ.2.5 இலட்சம்‌ என வழங்கும்‌ மானியம்‌ 3 ஆண்டுகளுக்கு வைப்பு நிதியாக வைக்கப்பட்டு பின்னர்‌ கடனுக்கு சரிகட்டப்படும்‌.

கடன்‌ வழங்கப்பட்ட 6 மாதங்கள்‌ கழித்து 5 ஆண்டுகளுக்குள்‌ திரும்பச்‌ செலுத்தப்பட வேண்டும்‌. இத்திட்டம்‌ மாவட்டத்‌ தொழில்‌ மையத்தின்‌ வாயிலாகச்‌ செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின்‌ கீழ்‌ பயன்பெற மாவட்டத்‌ தொழில்‌ மையங்களில்‌ விண்ணப்பத்தினைப்‌ பதிவு செய்ய வேண்டும்‌.

Vignesh

Next Post

பிரதமரின் 100-லது மனதின் குரல் நிகழ்ச்சி...! ஆளுநர் மாளிகையில் நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு...!

Sun Apr 30 , 2023
பிரதமர் நரேந்திர மோடி அகில இந்திய வானொலி மூலமாக தமது கருத்துகளை நாட்டு மக்களிடையே பகிர்ந்து கொள்ளும் மனதின் குரல் நிகழ்ச்சியின் 100-வது அத்தியாயம் இன்று ஒலிபரப்பாக உள்ளதையொட்டி தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் முக்கிய விருந்தினர்கள் பங்கேற்று அந்த உரையைக் கேட்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் நரேநே்திர மோடி, 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் “மன் கி பாத்” எனப்படும் மனதின் குரல் நிகழ்ச்சியில் நாட்டு மக்களிடம் […]
images 2023 04 30T055956.874

You May Like