5 பேர் பலி.. பலர் காயம்.. ஜெருசலேமில் நடந்த துப்பாக்கிச் சூடு.. பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

israel shooting 1

கிழக்கு ஜெருசலேமில் நடந்த துப்பாக்கிச் சூடு தாக்குதலில் குறைந்தது 5 பேர் உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்ததாகவும் இஸ்ரேல் அவசர சேவை திங்களன்று தெரிவித்தது, மேலும் அதில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் ஜெருசலேமில் உள்ள யிகல் யாடின் தெருவில் உள்ள ராமோட் சந்திப்பில் நடந்தது.


துப்பாக்கிச் சூடு நடந்ததாகக் கூறப்படும் முக்கிய சந்திப்பு, நகரின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள யூத குடியிருப்புகளுக்குச் செல்லும் சாலையில், ஜெருசலேமின் வடக்கு நுழைவாயிலில் உள்ளது. பயங்கரவாதிகள் ஒரு பேருந்தில் ஏறி பயணிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது.

ஜெருசலேமில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 15 பேர் உயிரிழந்ததாக இஸ்ரேலின் ஆம்புலன்ஸ் சேவை முதலில் தெரிவித்தது.. எனினும் பலி எண்ணிக்கை குறித்த புதுப்பிப்பை பின்னர் வழங்கியது.

துப்பாக்கி ஏந்திய 2 பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன…

இதுகுறித்து அதிகாரிகள் பேசிய போது “[உள்ளூர் நேரம்] காலை 10:13 மணிக்கு, தகவல்கள் கிடைத்தன… ஜெருசலேமில் உள்ள யிகல் யாடின் தெருவில் உள்ள ராமோட் சந்திப்பில், துப்பாக்கிச் சூட்டில் இருந்து சுமார் 15 பேர் காயமடைந்ததாகத் தெரிகிறது,” என்று தெரிவித்தனர்..

இந்த துப்பாக்கிச்சூடு தொடர்பான வீடியோக்கள் வெளியாகி உள்ளன.. காலை நேரத்தில் பரபரப்பான சந்திப்பில் உள்ள பேருந்து நிறுத்தத்திலிருந்து பலர் தப்பி ஓடுவதை அதில் பார்க்க முடிகிறது…

இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், பாலஸ்தீன போராளி அமைப்பான ஹமாஸுக்கு ஆயுதங்களை கைவிட்டு சரணடையுமாறு இறுதி எச்சரிக்கை விடுத்த சில மணி நேரங்களுக்குப் பிறகு துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடந்தது, இல்லையெனில் அது “அழிக்கப்படும் என்று எச்சரித்தார்.

காசாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பணயக்கைதிகளை விடுவிக்கக் கோரி ஜெருசலேமில் அடிக்கடி போராட்டங்கள் நடைபெறுகின்றன. கடந்த வாரம், ஜெருசலேமில் குப்பைத் தொட்டிகள் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட கட்டிடங்களுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர்..

Read More : சிக்கலான எலும்பு முறிவுகளை சரிசெய்யக்கூடிய Glue Gun..! விஞ்ஞானிகள் அசத்தல் கண்டுபிடிப்பு..!

RUPA

Next Post

#Breaking : காலையில் குறைந்த தங்கம் விலை மாலையில் ஜெட் வேகத்தில் உயர்ந்தது.. மீண்டும் ரூ.80,000-ஐ கடந்ததால் நகைப்பிரியர்கள் ஷாக்..!

Mon Sep 8 , 2025
உலக பொருளாதாரத்தில் நிலவும் ஏற்ற இறக்கங்களை பொறுத்து தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகள் தங்கம் விலை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார […]
Jewellery 1

You May Like