பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு 6,44,600 வீடுகள்…!

house scheme 2025

பிரதமரின் கிராமப்புற வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 6,44,600 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன என மத்திய அரசு தெரிவித்துள்ளது.


பிரதமரின் கிராமப்புற வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் 17.07.2025 வரை, தமிழ்நாட்டில் 9,57,825 வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 7,43,299 வீடுகள் கட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இவற்றில் 6,44,600 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழக அரசால் மொத்தம் 59,121 வீடுகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், இதே காலகட்டத்தில் பிரதமரின் கிராமப்புற வீட்டுவசதித் திட்டத்தின் கீழ், மத்திய பங்காக, ரூ.2158.14 கோடி மாநிலத்திற்கு விடுவிக்கப்பட்டுள்ளது.

கிராமப்புறங்களில் “அனைவருக்கும் வீடு” வழங்குவதற்காக, ஊரக மேம்பாட்டு அமைச்சகம் ஏப்ரல் 1, 2016 முதல் பிரதமரின் கிராமப்புற வீட்டுவசதித் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் மார்ச் 2029 க்குள் 4.95 கோடி தகுதியுள்ள கிராமப்புற குடும்பங்களுக்கு அடிப்படை வசதிகளுடன் வீடுகளை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. திட்டத்தின் பலன்களைப் பெற தகுதியுள்ள கூடுதல் குடும்பங்களை அடையாளம் காண தமிழ்நாடு அரசு ஆவாஸ் பிளஸ் 2024 கணக்கெடுப்பை மேற்கொள்ளவில்லை.

கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட நாடு தழுவிய ஊரடங்கு காலத்தில், பிரதமரின் கிராமப்புற வீட்டுவசதித் திட்டம் பாதிக்கப்பட்டது. இது தவிர, மாநில கருவூலத்திலிருந்து திட்டத்தின் மாநில முதன்மை கணக்கிற்கு மத்திய மற்றும் மாநில பங்கை வெளியிடுவதில் தாமதம், பயனாளிகளின் விருப்பமின்மை, நிரந்தர இடம்பெயர்வு, இறந்த பயனாளிகளின் வாரிசுரிமையில் ஏற்பட்ட சர்ச்சை, மாநிலங்கள் /யூனியன் பிரதேசங்களால் நிலமற்ற பயனாளிகளுக்கு நிலம் ஒதுக்குவதில் நேரிட்ட தாமதம் போன்ற சவால்கள் எதிர்கொள்ளப்பட்டன. இந்தத் திட்டத்தின் கீழ் இலக்குகளை அடைவதற்கான வேகத்தை அதிகரிக்க அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.

Read more: புனித பயணம் செல்ல நபர்களுக்கு… தமிழக அரசு வழங்கும் ரூ.10,000 நிதி உதவி…! முழு விவரம்

Vignesh

Next Post

'சலுகைகள் உரிமையல்ல; சட்டத்தை மீறும் வெளிநாட்டினருக்கு விசா ரத்து செய்யப்படும்'!. அமெரிக்கா எச்சரிக்கை!

Wed Jul 23 , 2025
அமெரிக்காவில் தாக்குதல், வீட்டு வன்முறை அல்லது பிற கடுமையான குற்றங்களைச் செய்வதற்கு எதிராக வெளிநாட்டினருக்கு இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது. இதுபோன்ற கடுமையான குற்றங்கள் உடனடியாக விசா ரத்து செய்யப்படலாம் மற்றும் எதிர்காலத்தில் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கான தகுதியை பாதிக்கலாம் என்று எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக தூதரகம் தனது எக்ஸ் தளத்தில், அமெரிக்க விசா என்பது “ஒரு சலுகை, ஒரு உரிமை அல்ல” என்றும் மேலும் குற்றச் செயல்கள் […]
US warning 11zon

You May Like