இதுக்கு எண்டே இல்லையா..? மேலும் 7 தமிழக மீனவர்கள் கைது.. இலங்கை கடற்படையினர் தொடர் அட்டூழியம்..!!

fisherman arrest

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படை கைது செய்து படகை பறிமுதல் செய்தனர்.


தமிழகத்தில் நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடல் எல்லை பகுதியில் மீன்பிடித்து வருகிறார்கள். இப்படி கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்யும் சம்பவங்களும் நின்றபாடில்லை.

எல்லை தாண்டியதாக கூறி மீனவர்களை கைது செய்வது மட்டும் இன்றி அவர்களது படகுகளை பறிமுதல் செய்து, மீன் பிடி பொருட்களை சேதப்படுத்தி பல்வேறு அட்டூழிய செயல்களிலும் இலங்கை கடற்படை ஈடுபட்டு வருகிறது. இலங்கை கடற்படையினரின் இந்த அத்துமீறிய செயலுக்கு முற்றுப்புள்ளி வைக்க கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசு தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறது.

எனினும் இதற்கு இதுவரை நிரந்தர தீர்வு எட்டப்படவில்லை. இந்த நிலையில் தான், நேற்று இரவு எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி ராமேஷ்வரம் மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படை கைது செய்து படகை பறிமுதல் செய்துள்ளது. நேற்று முந்தினம் கடலில் மீன்பிடித்த 8 பேரை இல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்தது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

கடந்த 2 நாட்களில் 15 தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. வாழ்வாதாரத்திற்காக மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்யும் சம்பவங்கள் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Read more: மக்களே.. இன்று முதல் Swiggy, Zomato உணவு டெலிவரி நிறுத்தம்..? – ஹோட்டல் சங்கம் அதிரடி முடிவு

English Summary

7 Rameswaram fishermen arrested for allegedly fishing across the border..!! Sri Lankan Navy atrocities

Next Post

இன்று தேசிய மருத்துவர் தினம்!. முதலமைச்சராக இருந்தபோதும் மருத்துவர் பணி; Dr. பி.சி. ராயின் மகத்தான சேவை!

Tue Jul 1 , 2025
ஊசி, மாத்திரையைக் கண்டால் பயப்படாத குழந்தைகளே இருக்க முடியாது. குறும்பு செய்யும் குழந்தைகளிடம், டாக்டரிடம் போய் ஊசி போட்டுவிடுவேன் என்று மிரட்டும் பெரியவர்களும் இருக்கிறார்கள். நம் உடல் நலத்தைப் பாதுகாக்கவே மருத்துவர் ஊசியையும் மாத்திரையையும் அளிக்கிறார் என்பதை அறியும்போது, மருத்துவர்களின் மீது மரியாதை வந்துவிடும். மனிதர்களின் வாழ்க்கையில் மருத்துவர்களுக்கு எப்பொழுதுமே உயர்வான இடம் உண்டு. நேரம் காலம் பார்க்காமல், ஓய்வு இன்றி உழைக்கக்கூடியவர்கள் மருத்துவர்கள். கரோனா போன்ற கொள்ளை நோய் […]
national doctors day 11zon

You May Like