மதுரை மாவட்டம் ஜெய்ஹிந்த் புறம் ஜீவா நகர் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் அர்ஜுனன்(30). இவர் மீது திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் காவல் நிலையத்தில் நிலுவையில் இருக்கின்றன. இவருடைய அத்தையான 70 வயது மூதாட்டி ஒருவர் அந்த பகுதியில் தனியாக வசித்து வந்திருக்கிறார்.
அந்த மூதாட்டியின் வீடு காலை வெகு நேரம் ஆன பின்னரும் திறக்கப்படாமல் இருந்திருக்கிறது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவருடைய வீட்டிற்கு சென்று பார்த்தனர். அப்போது மூதாட்டி உடலில் காயங்களுடன் மயங்கிய நிலையில் கிடந்திருக்கிறார்.
இதனால் அதிர்ந்து போன அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள், உடனடியாக ஜெய்ஹிந்த்புரம் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மூதாட்டியை மீட்டு அவசர உறுதியின் மூலமாக மதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கே அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகவும், அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதால் உயிரிழந்திருப்பதாகவும் கூறி இருக்கின்றனர்.
இது தொடர்பாக ஜெய்ஹிந்த்புரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் மூதாட்டியின் மருமகனான அர்ஜுனன் என்பவர் மீது சந்தேகம் எழுந்துள்ளது. அவரிடம் கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டபோது, கஞ்சா போதையில் மூதாட்டியின் வீட்டிற்குள் புகுந்த அவர் மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார் என்பது தெரிய வந்தது. இதன் காரணமாக, அந்த மூதாட்டி மயங்கியதால் அர்ஜுனன் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இந்த சம்பவம் குறித்து அர்ஜுனனை காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள்.