மனைவியின் நடத்தையில் சந்தேகம்..!! அடிக்கடி சண்டை..!! பெற்ற மகளுக்கு விஷம் வைத்துக் கொன்ற தந்தை..!!

மகாராஷ்டிர மாநிலம் லாத்தூர் மாவட்டம் சாகாட் கிராமத்தை சேர்ந்த வாலிபர் தனது மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், மனைவியின் நடத்தையில் அவர் சந்தேகம் அடைந்து அது குறித்து மனைவியிடம் கேட்டுள்ளார். இதனால் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த தகராறில் தனது இரண்டு மகள்களையும் அழைத்துக் கொண்டு தாய் வீட்டிற்கு சென்று விட்டார் அந்த இளம்பெண். மறு நாள் தன் மனைவியை சமானப்படுத்தி அழைத்து வர வேண்டும் என்பதற்காக மாமியார் வீட்டிற்கு சென்றிருக்கிறார் அந்த வாலிபர். எவ்வளவு சொல்லி பேசியும் மனைவி வர மறுத்திருக்கிறார். இதனால் அந்த வாலிபர் தான் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்திருக்கிறார்.

அதற்கு முன்பாக தனது இரண்டு மகளுக்கும் விஷம் கொடுத்து கொன்று விட முடிவெடுத்து இருக்கிறார். அதன்படி, விஷம் கலந்த உணவை 6 வயது சிறுமிக்கு ஊட்டி இருக்கிறார். அந்த உணவை சாப்பிட்ட சிறுமி வாந்தி எடுத்துள்ளார். அடுத்து இளைய மகளுக்கும் சாப்பாடு ஊட்டி இருக்கிறார் . ஏதோ விபரீதம் நடக்கிறது என்பதை தெரிந்து கொண்ட உறவினர்கள், இளைய மகளுக்கு சாப்பாடு ஊட்டுவதை தடுத்து நிறுத்தியுள்ளனர். அந்த நேரத்தில் திடீரென்று விஷம் கலந்த உணவை அந்த வாலிபர் சாப்பிட்டுள்ளார். சிறிது நேரத்தில் தந்தையும் மகளும் மயங்கி கிடந்திருக்கிறார்கள். அவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்துள்ளனர். அங்கு 6 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. வாலிபருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Chella

Next Post

திருவண்ணாமலை அருகே 8 வயது சிறுமி தீயில் கருகி பலி…..! பெற்றோர் அலட்சியத்தால் ஏற்பட்ட விபரீதம்…..!

Sat May 13 , 2023
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள குன்னத்தூர் ஊராட்சிக்குட்பட்ட அகஸ்தியபுரம் கிராமத்தைச் சேர்ந்த சிவகுமார் என்பவர் கூலி தொழில் செய்து வருகிறார். இவருடைய மகள் வைஷ்ணவி (8) அதே கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வருகிறார் இந்த நிலையில், சிவகுமாரும், அவருடைய மனைவியும் வேலைக்கு சென்றுள்ளனர். தற்சமயம் விடுமுறை வழங்கப்பட்டிருப்பதால் வைஷ்ணவி அவரது வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக வைஷ்ணவியின் உடலில் தீ […]

You May Like