நாட்டின் 77-வது குடியரசு தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.. தேசிய தலைநகரில் குடியரசு தின கொண்டாட்டங்கள் தொடங்கிய நிலையில், பிரதமர் நரேந்திர மோடி வரலாற்று சிறப்புமிக்க இந்தியா கேட் அருகே உள்ள தேசிய போர் நினைவுச்சின்னத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
அவருடன் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், பாதுகாப்பு சேவைகள் தலைமைத் தளபதி ஜெனரல் அனில் சவுகான், ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி, விமானப் படைத் தலைவர் ஏர் சீஃப் மார்ஷல் ஏபிஎஸ் சிங், கடற்படைத் தலைமைத் தளபதி அட்மிரல் தினேஷ் திரிபாதி ஆகியோர் இருந்தனர்..
இந்த குடியரசு தின விழாவில் பங்கேற்பதற்காக குடியரசு தலைவர் மாளிகையில் இருந்து சாரட் வண்டியில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு புறப்பட்டார்.. குதிரைகள் பூட்டப்பட்ட பாரம்பரியமான சாரட் வண்டியில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அழைத்து செல்லப்பட்டார்.. சிறப்பு விருந்தினர்களான ஐரோப்பிய கவுன்சில் தலைவர், ஐரோப்பிய ஆணையத்தின் தலைவரும் அழைத்து செல்லப்பட்டனர்.
பின்னர் 77-வது குடியரசு தின விழாவிற்கு வருகை தந்த குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை பிரதமர் மோடி வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்த ஐரோப்பிய கவுன்சில் தலைவர், ஐரோப்பிய ஆணையத்தின் தலைவரையும் பிரதமர் மோடி வரவேற்றார்..
இதையடுத்து குடியரசு தினத்தை ஒட்டி டெல்லி கடமைப்பாதையில் மூவர்ண கொடியை திரௌபதி முர்மு ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.. பட்டொளி வீசி பறக்கும் தேசியக் கொடிக்கு ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் தூவப்பட்டன..
இந்த விழாவில் இந்திய விண்வெளி வீரர் சுபான்சு சுக்லாவுக்கு அசோக சக்ரா விருதை ஜனாதிபதி திரௌபதி முர்மு வழங்கினார்.. சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பயணம் சென்ற முதல் இந்திய வீரரான் சுபான்சு சுக்லாவுக்கு இந்த விருது வழங்கப்படது.. தொடர்ந்து குடியரசு தின அணிவுகுப்புகள் நடைபெற்று வருகின்றன..



