இந்தியாவில் ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்ட காலத்திலிருந்தே காகிதத்தினாலான பணத்தாள்களையே நாம் பயன்படுத்தி வருகிறோம். இந்நிலையில், நாட்டின் பணப்புழக்க வரலாற்றில் முதன்முறையாகப் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளைச் சோதனை முறையில் அறிமுகப்படுத்த இந்திய ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. முதற்கட்டமாக, அதிக பயன்பாட்டில் இருக்கும் 10 ரூபாய் மற்றும் 20 ரூபாய் மதிப்பிலான பிளாஸ்டிக் நோட்டுகள் புழக்கத்திற்கு வரவுள்ளன. ரிசர்வ் வங்கியின் இந்தப் பரிந்துரையை ஏற்று அனுமதி வழங்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, […]

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு எந்தவித அனுமதியும் வழங்கக் கூடாது என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், “மேகதாதுவில் அணை கட்டுவதற்குத் தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களின் ஒப்புதலை கர்நாடகா பெற வேண்டிய அவசியமில்லை எனக் நாடாளுமன்றத்தில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் ராஜ்பூஷன் தெரிவித்த பதில் மிகவும் ஏமாற்றமளிக்கிறது. கூட்டாட்சித் தத்துவத்திற்கும் உச்சநீதிமன்றத் தீர்ப்புகளுக்கும் எதிராக அமைந்துள்ள அந்த […]

இந்தியாவின் வேகமாக வளர்ந்து வரும் ‘கிக் எகானமி’ (gig economy) எனப்படும் தற்காலிக அல்லது ஒப்பந்த அடிப்படையிலான பணிச் சூழலில் ஈடுபட்டுள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு மத்திய அரசு ஒரு மகிழ்ச்சியான செய்தியை அளித்துள்ளது. உணவு விநியோகப் பணியாளர்கள், வாடகை வாகன ஓட்டுநர்கள், தனிப்பட்ட முறையில் பணிபுரிபவர்கள் (freelancers) மற்றும் மின்னணு வர்த்தக (e-commerce) விநியோகப் பணியாளர்கள் ஆகியோரை ‘ஊழியர் மாநில காப்பீட்டுக் கழகத்தின்’ (ESIC) சமூகப் பாதுகாப்பு வரம்பிற்குள் கொண்டுவருவதற்கான […]

காலநிலை மாற்றம் மற்றும் ‘எல் நினோ’ (El Niño) நிகழ்வின் விளைவுகள் குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மாநிலங்களை எச்சரித்துள்ளார். நிதி ஆயோக்கின் (NITI Aayog) 11-வது நிர்வாகக் குழு கூட்டத்தில் பேசிய அவர், நாட்டின் அனைத்து மாநிலங்களும் நீர் சேமிப்பிற்கு முன்னுரிமை அளிக்குமாறும், வரவிருக்கும் காலநிலை சவால்களை எதிர்கொள்ள முன்கூட்டியே திட்டங்களை வகுக்குமாறும் அறிவுறுத்தினார். 28 மாநிலங்கள் மற்றும் ஐந்து யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதிகள் பங்கேற்ற இக்கூட்டத்தில், […]

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இன்று (ஜூன் 03) நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், பல வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவுகள் எடுக்கப்பட்டன. நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறையை மேலும் வலுப்படுத்தவும், சர்வதேச எரிபொருள் விலைகளில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களிலிருந்து அத்துறைக்குப் பாதுகாப்பு அளிக்கவும் மத்திய அரசு ஒரு புதுமையான நடவடிக்கையை எடுத்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, “விமான டர்பைன் எரிபொருள் விலை நிலைப்படுத்தல் நிதியை” (Aviation Turbine Fuel Price […]