பிறந்த பெண் குழந்தையின் வயிற்றுக்குள் 8 கருக்கள்..!! மருத்துவர்கள் சொல்லும் அதிர்ச்சி காரணம்..!!

பிறந்து 21 நாட்களே ஆன பச்சிளங்குழந்தையின் வயிற்றுக்குள் 8 கருக்கள் இருந்ததைக் கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஜார்க்கண்ட் மாநிலத்தில் நிகழ்ந்த இந்த வினோத செயல் மருத்துவ உலகில் சவாலாகப் பார்க்கப்படுகிறது.

ஜார்க்கண்ட் மாநிலம் ராம்கர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த மாதம் 10ஆம் தேதி பெண் ஒருவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. பிறந்த பெண் குழந்தை ஒன்றுக்கு மார்பு எலும்புக்கு கீழே வயிற்றில் கட்டி போல் இருப்பதை கவனித்த மருத்துவர்கள் அதனை அறுவை சிகிச்சை செய்து உடனடியாக அகற்ற வேண்டும் என குழந்தையின் பெற்றோரிடம் பரிந்துரைத்துள்ளனர். இதையடுத்து, பெற்றோர் சம்மதத்துடன் குழந்தை பிறந்து 21 நாட்கள் ஆன நிலையில், அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. அப்போது, குழந்தையின் வயிற்றில் இருந்து கட்டியையும் மருத்துவர்கள் அகற்றிய நிலையில், அது பார்ப்பதற்கு நீர்க்கட்டி போல இருந்ததாக கூறப்படுகிறது.

பிறந்த பெண் குழந்தையின் வயிற்றுக்குள் 8 கருக்கள்..!! மருத்துவர்கள் சொல்லும் அதிர்ச்சி காரணம்..!!

அதனை பரிசோதித்த போது அந்த நீர்க்கட்டியில் 8 கருக்கள் இருந்தது தெரியவந்துள்ளது. அவை ஒவ்வொன்றும் 3 முதல் 5 செ.மீ. வரை இருந்துள்ளது. அறுவை சிகிச்சை வெற்றிகரமான நடந்து நீர்க்கட்டி அகற்றப்பட்டதைத் தொடர்ந்து அடுத்த வாரம் குழந்தை டிஸ்சார்ஜ் செய்யப்படவுள்ளதாகவும், அதுவரை மருத்துவமனை கண்காணிப்பில் இருக்க வேண்டும் எனவும் குழந்தையை பரிசோதித்த மருத்துவர் இம்ரான் தெரிவித்துள்ளார். பிறந்த குழந்தையின் வயிற்றில் கரு உருவாகி இருப்பது என்பதே நம்ப முடியாத ஒன்று. ஆனால், 8 கருக்கள் ஒன்றாக இருந்தது என்பது மருத்துவ உலகில் நடக்கும் அரிதான நிகழ்வு என்கின்றனர் மருத்துவர்கள். இது மிகவும் அரிதான நடக்கக் கூடியது என்றும், பிறக்கும் 5 லட்சம் குழந்தைகளில் ஒரு குழந்தைக்குத் தான் இதுபோன்று உருவாகும் என்றும் ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.

பிறந்த பெண் குழந்தையின் வயிற்றுக்குள் 8 கருக்கள்..!! மருத்துவர்கள் சொல்லும் அதிர்ச்சி காரணம்..!!

இந்த அரிய நிகழ்வை கருவுக்குள் கரு உருவாதல் என்கின்றனர். இதை ஆங்கிலத்தில் fetus-in-fetu (FIF) என்கின்றனர். இருப்பினும், ஒரு குழந்தையின் உடலுக்குள் ஒரு கரு தான் இதுவரை இருந்தது கண்டறியப்பட்டிருந்தாலும், 8 கருக்கள் ஒரே குழந்தையின் வயிற்றில் இருந்தது இது தான் முதன்முறை என்று மருத்துவர் இம்ரான் கூறியுள்ளார். இது குறித்து ராஞ்சி, ராணி மருத்துவமனையில் தலைவர் ராஜேஷ் சிங் கூறுகையில், “இது மிக மிக அரிதான நிகழ்வு என்பதால், இதனை சர்வதேச இதழ்களில் ஆய்வுக் கட்டுரையாக வெளியிட திட்டமிட்டு வருகிறோம்” என்று கூறியுள்ளார்.

Chella

Next Post

ரூ.85,570 சம்பளம்..!! மத்திய அரசின் நிறுவனத்தில் சூப்பர் வேலை..!! விண்ணப்பிப்பது எப்படி..?

Mon Nov 7 , 2022
மத்திய அரசின் செக்யூரிட்டி பிரிண்டிங் அண்ட் மின்டிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா கீழ் இயங்கும் மும்பையில் உள்ள இந்திய நாணயங்கள் தயாரிப்பு நிறுவனத்தில் உள்ள Engraver, Junior Office Assistant பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணியின் முழு விவரம்… நிறுவனம்: Security Printing & Minting Corporation of India Ltd பணியின் பெயர்: Engraver (Metal Works) B-4 Level , Junior Office […]

You May Like