9 மாதம் கர்ப்பம்… வயிற்றில் துணி வைத்து நடித்து வந்த பெண்.. ஏன் தெரியுமா?

தான் ஒன்பது மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்து பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அழைத்து வந்தபோது பெண்ணை சோதித்த மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே குமராட்சியை சேர்ந்தவர் 23 வயதான பெண். இவர் திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகின்றது. இரண்டு முறை கர்ப்பமான இவருக்கு கருக்கலைப்பு நடந்துள்ளது. இதனால் மன அளவில் பாதிக்கப்பட்டிருந்தார் அந்த பெண். இந்நிலையில் 3வதாக கர்ப்பம் அடைந்தார் அந்த நேரத்தில் அவரது கணவர் வெளிநாட்டிற்கு சென்றுவிட்டார். அந்த நேரத்தில் கருகலைந்துள்ளது. இதனால் என்ன செய்வதென்று அவர் தெரியாமல் விழித்துள்ளார்.

இந்த விவகாரம் கணவரின் குடும்பத்தினருக்கு தெரியவந்தால் தன்னை அவர்கள் ஒதுக்கி வைத்துவிடுவார்கள் என பயந்து வயிற்றில் துணி கட்டிக் கொண்டு கர்ப்பமாக இருப்பது போல் நடிக்கத் தொடங்கினார். பின்னர் 9 மாதங்கள் கடந்தது தொடர்ந்து கர்ப்பிணியாகவே நடித்து வந்தார்.

இந்நிலையில் 9 மாதங்கள் நிறைவடைந்த நிலையில் எல்லோரும் குழந்தை எப்போது பிறக்கும், என்பது பற்றி பேச தொடங்கிவிட்டனர். இந்நிலையில் அவர்களை சமாளிக்க வயிறு வலிப்பதாக கூறி கிளம்பினார். தனியாக செல்ல வேண்டாம் நாங்களும் வருகின்றோம் என கூறி உடன் தாய், தந்தை, மாமியார் என அனைவரும் வந்த நிலையில் மருத்துவமனைக்கு சென்றனர்.

மருத்துவமனையில் பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர். வயிற்றில் குழந்தைக்கு பதிலாக துணி மூட்டை எடுக்க எடுக்க துணியாக வந்துள்ளது. கருத்தரிக்காமலேயே கர்ப்பிணியாக நடித்தது தெரியவந்துள்ளது. இந்நிலையில் வெளியில் வந்த பெண் வெளியே வந்து வீட்டு உறுப்பினர்களிடம் உண்மையை கூறாமல் கழிவறைக்கு சென்றபோது குழந்தை இறந்துவிட்டதாக கூறியுள்ளார்.

இவர் கூறிய பொய்யை கேட்ட மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அங்கு வந்த மருத்துவமனை ஊழியர்கள் பெண்ணின் உறவினர்களிடம் நடந்ததை கூறியுள்ளனர். அத்துடன் போலீஸுக்கும் தகவல் கொடுத்தனர். பின்னர் அவரை காவல்நிலையம் அழைத்துச் சென்று அறிவுரை வழங்கி வீட்டுக்கு அனுப்பிவைத்தனர்.

Next Post

சென்னை-மைசூரு இடையே சீறிப்பாய்ந்த வந்தே பாரத் ரயில்…

Mon Nov 7 , 2022
இந்தியாவின் 5வது வந்தே பாரத் ரயில் சென்னை-மைசூரு இடையே தொடங்கப்பட்டுள்ளது. இது பெங்களூருவை காலை 10.5 மணிக்கு வந்தடைந்தது. சென்னையில் அதிவேக ரயில் ’வந்தே பாரத்’ சென்னை ஐ.சி.எப்.பில் தயாராகி தெற்கு ரயில்வேயிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 130-73 கிலோ மீட்டர் வேகத்தில் இயங்கும் இந்த ரயில் சேவை தமிழகத்திற்கு முதன் முதலில் வருவதால் மக்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருந்தனர். இந்த ரயில் 6 மணி நேரம் 40 நிமிடத்தில் 504 கிலோ […]

You May Like