திருவண்ணாமலை மாவட்ட அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளை பொறுப்புகளில் இருந்து நீக்கி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.
அரசு வேலை வாங்கித் தருவதாக சேலத்தைச் சேர்ந்த குழந்தைவேலுவிடம் ரூ.11 லட்சம், அசோக்கிடம் ரூ.5.20 லட்சம் பெற்று அதிமுக ஐடி பிரிவு மாநில நிர்வாகி பிரசோத் என்பவர் மோசடியில் ஈடுபட்டுள்ளார். இதுதொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து பிரசாத் மீது நுங்கம்பாக்கம் காவல்துறை மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். ஏற்கனவே நுங்கம்பாக்கம் பாரில் நடந்த மோதல் தொடர்பாக மே 29-ம் தேதி பிரசாத் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் உள்ளார். அதிமுக ஐ.டி. விங் நிர்வாகி பிரசாத் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்ட சில அதிமுக நிர்வாகிகளை பொறுப்புகளில் இருந்து நீக்கி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். அதன்படி, திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் அதிமுக நிர்வாகிகள் பாஷ்யம், இளங்கோ, திருவண்ணாமலை மத்திய மாவட்ட நிர்வாகிகள் ஏ.செல்வன், ஜெயப் பிரகாஷ் (ஆரணி ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர்), என்.சேகர், ஜே. கணேசன், என். ஈஸ்வரி, எம். ஈஸ்வரி, கே.சுந்தரம் ஆகியோர் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுவதாக எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
Read More: பரபரப்பு…! செந்தில் பாலாஜியின் சகோதரர் உட்பட 12 பேருக்கு 50,000 பக்கத்தில் குற்றப்பத்திரிகை…!