தமிழகத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது..
தமிழக அரசு இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ ஆதி திராவிட மற்றும் பழங்குடியின நலத்துறையின் செயலாளராக ஜவஹர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.. தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சிக்கழக (சிட்கோ) மேலாண் இயக்குநராக மதுமதி நியமிக்கப்பட்டுள்ளார்.. பொதுப்பணித்துறையின் முதன்மை செயலாளராக மணிவாசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை செயலாளராக மங்கத்ராத் ஷர்மா நியமிக்கப்பட்டுள்ளார்..
கால்நபடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளத்துறை செயலாளராக ஏ கார்த்திக் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.. ஆதி திராவிடர் நலத்துறை இயக்குநராக ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளார்..” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..