விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செயல்படுத்தி வருகிறது. மாவட்ட, மாநில மற்றும் சர்வதேச அளவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் மாணவர்களை பங்கேற்க செய்யும் வகையில் பயிற்சிகளை அரசு வழங்கி வருகிறது. அதேபோல விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியம் என்கின்ற திட்டத்தையும் அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது.
விளையாட்டு வீரர்களின் வலிமையும் ஆற்றலும் பொருந்திய காலம் நிறைவான பிறகு, சாதனைகளை அங்கீகரித்து ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. அவ்வாறு நலிந்த நிலையில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஓய்வூதிய தொகையான ரூ.3,000, தற்போது 6,000 ரூபாயாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியீட்டு.