ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் நகரின் காதிகியா பகுதியில் ஒரு தனியார் பள்ளி இயங்கி வருகிறது. அந்த பள்ளியில் படிக்கும் 34 மாணவர்கள் பள்ளிக் கட்டணம் செலுத்தவில்லை என்று சொல்லி அவர்களை நேற்று முன்தினம் ஒரு வகுப்பறையில் ஆசிரியர்கள் அடைத்துள்ளனர். ஐந்து மணி நேரம் அந்த மாணவர்களை சாப்பிட, தண்ணீர் குடிக்க, கழிப்பறை செல்ல கூட அனுமதிக்கவில்லை என்று கூறுகின்றனர்.
பள்ளிக் கட்டணம் செலுத்தாததால் அடைத்து வைத்திருப்பதாக அந்த மாணவர்களிடம் கூறிய பள்ளி நிர்வாகிகள், மாணவர்கள் தங்கள் பெற்றோருக்கு போன் மூலம் தகவல் தெரிவிக்கவும் அனுமதிக்கவில்லை சுமார் ஐந்து மணி நேரம் கழிந்த நிலையில், கட்டணம் செலுத்தாதது குறித்த நோட்டீசை மாணவர்களுக்கு கொடுத்து, அதை அவர்கள் அவர்களுடைய பெற்றோரிடம் கொடுக்கும்படி கூறியுள்ளனர்.
இதனால் பள்ளி நிர்வாகத்தின் மீது கோபமடைந்த பெற்றோர்கள் நேற்று பெருமளவில் திரண்டு, பள்ளி முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த பெற்றோரில் ஒருவர், தான் ஏற்கனவே ஆன்லைன் வாயிலாக பள்ளிக் கட்டணத்தைச் செலுத்திவிட்டதாகவும், ஆனால் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அது தெரியவில்லை என்றும் கூறினார்.