விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த பொன்பத்தி கிராமத்தில் வசித்து வரும் இளம்பெண்ணுக்கும் ரெட்டிபாளையம் கிராமத்தை சேர்ந்த ராணுவ வீரரான சிலம்பரசன் (35) இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் 2010-ஆம் வருடம் முதல் சுமார் 13 வருடங்கள் காதலித்து வந்துள்ளனர். ராணுவத்தில் சேர்வதற்கு முன்பிருந்தே சிலம்பரசன் திருமணம் செய்து கொள்வதாக அந்த பெண்ணிடம் ஆசை வார்த்தை கூறி வந்துள்ளார்.
அதன் பிறகு ராணுவத்தில் சேர்ந்த பிறகும் தொலை பேசியில் அடிக்கடி பேசி வந்துள்ளனர். விடுமுறையில் வரும் போதெல்லாம் அந்தப்பெண்ணை பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்றுள்ளார். அதுமட்டுமின்றி அவரது ரெட்டிபாளையம் வீட்டிற்கு அழைத்துச் சென்று திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை பேசி நம்ப வைத்து தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளார். இதே போல் விடுமுறையில் வரும் போதெல்லாம் அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளார்.
தற்போது சிலம்பரசன் விடுமுறையில் வந்துள்ளார். கடந்த ஆகஸ்ட் 24-ஆம் தேதி திருமணம் செய்து கொள்ளலாம் என அந்த பெண் கேட்ட போது அதற்கு மறுப்பு தெரிவித்த சிலம்பரசன் அந்தப்பெண்ணை அவதூறாகவும் ஆபாசமாகவும் பேசியுள்ளார். இதனால் அதிர்ச்சியடை அந்த பெண் ராணுவ வீரரான, சிலம்பரசன் மீது திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை பேசி, பலமுறை தனிமையில் உல்லாசமாக இருந்து விட்டு, இப்போது திருமணம் செய்ய மறுப்பதாக, செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த அனைத்து மகளிர் காவல்துறையினர் சிலம்பரசனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.