மத்திய அரசு ஊழியர்களுக்கு மேலும் ஒரு நல்ல செய்தி கிடைத்துள்ளது. ஆம்.. ஜூலை மாதத்திற்கான, அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் தரவை தொழிலாளர் அமைச்சகம் வெளியிட்டுள்ளது. ஜூன் மாதத்தில் 129.2 ஆக இருந்த நிலையில் தற்போது 0.7 புள்ளிகள் அதிகரித்துள்ளது. ஜூலையில் இந்த எண்ணிக்கை 129.9 ஆக இருந்தது. இந்த உயர்வு அடுத்த ஆண்டு ஜனவரியில் ஊழியர்களின் அகவிலைப்படியை அதிகரிக்க வழி வகுத்துள்ளது. எனவே ஜூலை முதல் டிசம்பர் வரையிலான ஏஐசிபிஐ இன்டெக்ஸ் தரவுகளின் அடிப்படையில், அடுத்த ஆண்டு ஜனவரியில் அகவிலைப்படி அதிகரிக்கும்.
இதனிடையே ஜனவரி முதல் ஜூன் வரையிலான தரவுகளின் அடிப்படையில் ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.. ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வு குறித்த செப்டம்பர் 28 அன்று மத்திய அரசு அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. தற்போதைய நிலவரப்படி அகவிலைப்படி 4% உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்படி தற்போது உள்ள 34 சதவீதத்திற்கு பதிலாக 38 சதவீத டிஏ உயர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அகவிலைப்படி உயர்வு எப்போது அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்த நிலையில், அடுத்த மாதம் போது இதற்கான அறிவிப்பு வெளியாகலாம். உயர்த்தப்பட்ட சம்பளத் தொகையானது மத்திய ஊழியர்களின் வங்கிக் கணக்குகளுக்கு செப்டம்பர் 30-ஆம் தேதி செலுத்தப்படும் என்று கூறப்படுகிறது..
7வது ஊதியக் குழுவின்படி, மத்திய ஊழியர்களின் அகவிலைப்படி ஆண்டுக்கு இருமுறை, ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் உயர்த்தப்படுகிறது. இது முந்தைய ஆறு மாதங்களுக்கான AICPI குறியீட்டை அடிப்படையாகக் கொண்டது. இம்முறை, ஜூலை மாதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, ஊழியர்களுக்கு செப்டம்பர் மாத சம்பளம் மற்றும் இரண்டு மாத நிலுவைத் தொகையும் கிடைக்கும்.
மத்திய ஊழியர்களுக்கான அகவிலைப்படி ஏஐசிபிஐ குறியீட்டின் அடிப்படையில் மட்டுமே கணக்கிடப்படுகிறது. தொழிலாளர் அமைச்சகம் அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டு எண் (AICPI) புள்ளிவிவரங்களை வெளியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.