ராமநாதபுரத்தில் இன்று முதல் 2 மாதங்களுக்கு 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுகிறது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நாளை மறுநாள் (11.09.2022) தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.. மேலும் அக்டோபர் 30-ம் தேதி பசும்பொன்னில் தேவர் குருபூஜை விழா நடைபெற உள்ளது.. இதையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை கருத்தில் கொண்டு இன்று முதல் 2 மாத காலத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.. மாவட்ட ஆட்சியர் ஜானிடாம் வர்கீஸ் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்..
மேலும் வரும் 15-ம் தேதி வரையும், அக்டோபர் 25-ம் தேதி முதல் 31-ம் தேதி வரையும் வெளி மாவட்டங்களில் இருந்து வாடகை வாகனங்கள், சரக்கு வாகனங்கள், டிராக்டர்கள், மோட்டார் சைக்கிள்கள், ஆட்டோகளில் நினைவிடங்களில் அஞ்சலி செலுத்த வரவும் தடை விதிக்கப்படுகிறது..
நினைவிடங்கள் அமைந்துள்ள பகுதிகளில் 1 கி.மீ தூரத்திற்கு மட்டுமே மாவட்ட நிர்வாகத்தின் முன் அனுமதி பெற்று ஜோதி எடுத்து வர வேண்டும்.. அஞ்சலி செலுத்த வாகனங்களில் வருகிறவர்கள், மாவட்ட நிர்வாகத்தின் முன் அனுமதி பெற்று தான் வர வேண்டும்..