ராமநாதபுரத்தில் நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியருக்கு கிராம மக்கள் உற்சாக வரவேற்பு அளித்து அவருக்கு தங்க மோதிரம் பரிசளித்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கீழாம்பல் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவர் தன் எளிமையான தோற்றத்தால் மாணவர்களிடம் அன்போடும் கனிவோடும் பேசி பள்ளி மாணவர்களின் தரத்தை உயர்த்தியவர். இதனால் கடந்த 5ம் தேதி கொண்டாடப்பட்ட ஆசிரியர் தின விழாவில் இவருக்கு குடியரசுத் தலைவர் நல்லாசிரியர் விருது வழங்கினார்.
இவர் டெல்லியில் இருந்து இன்று ராமநாதபுரத்திற்கு திரும்பினார். கீழாம்பல் என்ற கிராமத்தில் கிராம மக்கள் இவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அவருகக்கு தங்க மோதிரம் அணிவித்து அழகு பார்த்தனர்.மேள தாளங்களுடன் ராமச்சந்திரனை வரவேற்ற மக்கள் அவருக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர். பள்ளிக்கு வரும் போது கூட பள்ளி சீருடையிலேயே வருவார். மாணவர்கள் உடன் நன்றாக பழகுவதாலேயே இவர் விருப்பமான ஆசிரியராக ஆனார். குடியரசுத் தலைவரிடம் விருது பெற்றபோது கூட சீருடையில் இருந்தார்