கனமழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். .
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை ஆங்காங்கே பெய்துவருகின்றது. நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் இன்று காலை முதலே கனமழை பெய்து வருகின்றது. இதனால் நாளை இந்த தாலுகாக்களுக்குள்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இன்றைய நிலவரப்படி கூடலூர் , பந்தலூரில் 16 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. கனமழையால் பொன்னானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்ப்பட்டு, சாலைகள், வாழை தோட்டங்களில் ஆற்று வெள்ளம் சூழ்ந்துள்ளது. மேலும் இரண்டு வீடுகள் இடிந்து சேதமடைந்துள்ளது.