தெலுங்கு பட நடிகர் ராம் பொத்தினேனியுடன் இணைந்து இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் திரைப்படம் இயக்க உள்ளதாக தகல் வெளியாகி உள்ளது.
கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது. கலவையான விமர்சனைங்களை பெற்றிருக்கின்றது. அடுத்ததாக நடிகர் ராம் பொத்தினேனுயடன் இணைந்து புதிய படம் இயக்க உள்ளதாக ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த படம் வித்தியாசமான, ஆர்வமூட்டும் கதைக்களமாக இருக்கும். மேலும் ராம் பொத்தினேனி மாஸ் ஆக்ஷன் திரைப்படங்களை தேர்ந்தெடுக்காமல் சுவாரஸ்யமான குடும்ப கதை , காதல் கதைகளை தேர்ந்தெடுக்கின்றார். எனவே இருவரின் கூட்டணியில் உருவாகும் இந்த படம் ரசிகர்களைகண்டிப்பாக ஈர்க்கும் என கூறலாம். மேலும் தற்போது ராம் பொத்தினேனியின் ’’போயா பட்டி ராப்பே’’ என்ற படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்க உள்ளது எனவே இது முடிந்தவுடன் வாசுதேவ் மேனனின் படப்பிடிப்புகள் தொடங்கும் என்று கூறப்படுகின்றது.