தினமும் 2.5 ஜிபி டேட்டா.. 90 நாட்கள் வேலிடிட்டி.. அசத்தல் ரீசார்ஜ் திட்டம்..

நாட்டின் இரண்டாவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல் சமீபத்தில் தனது வாடிக்கையாளர் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது. மற்ற தொலைத்தொடர்பு ஆபரேட்டர்களுடன் ஒப்பிடும்போது பல திட்டங்கள் விலை குறைவாக உள்ளன. ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டங்கள், ஏர்டெல் 4ஜி டேட்டா ரீசார்ஜ், பிரபலமான திட்டங்கள், உண்மையிலேயே அன்லிமிடெட் பிளான்கள் போன்ற பல வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

airtel 1589554833

அந்த வகையில் ஏர்டெல் நிறுவனத்தின் பிரபலமான ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை குறித்து பார்க்கலாம்.. இந்த ப்ரீபெய்ட் ரூ. 399 என்ற விலையில் கிடைக்கிறது.. இந்த திட்டத்தின் கீழ் 28 நாட்கள் செல்லுபடியாகும். இத்திட்டத்தில் தினமும் 2.5 ஜிபி அதிவேக இணையம் கிடைக்கும். அதாவது, 28 நாட்களில் முழு 70ஜிபி டேட்டாவை பெறலாம்.. . அதிவேக இணைய வரம்பு முடிந்த பிறகு, இணைய வேகம் 64kbps ஆகிறது. இந்த திட்டத்தில், நீங்கள் தினமும் 100 இலவச எஸ்எம்எஸ் பெறலாம்..

அடிப்படை நன்மைகள் தவிர, பல கூடுதல் நன்மைகளும் திட்டத்தில் கிடைக்கின்றன. அதாவது டிஸ்னி + ஹாட்ஸ்டாரின் 3 மாத மொபைல் சந்தாவும் கிடைக்கும்.. கூடுதலாக, இலவச ஹெலோட்யூன்களுக்கான சந்தாவையும் பெறலாம்.. இது, உங்களுக்கு பிடித்த எந்த பாடலையும் ஹலோ டியூனாக அமைக்க உதவுகிறது.

இது தவிர, நீங்கள் இசையைக் கேட்பதில் அதிக விருப்பமுள்ளவராக இருந்தால், இந்த திட்டம் உங்களுக்கு Wynk மியூசிக் இலவச சந்தாவை வழங்குகிறது, இதன் மூலம் நீங்கள் சமீபத்திய பாடல்களைக் கேட்டு மகிழலாம். இந்த அனைத்து நன்மைகளுடனும் மற்றொரு நன்மை என்னவென்றால், இதன் மூலம் FASTagல் ரூ.100 கேஷ்பேக் கிடைக்கும். இந்தத் திட்டத்தைப் பற்றிய கூடுதல் தகவலுக்கு, நீங்கள் ஏர்டெல் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தை பார்வையிடலாம்..

RUPA

Next Post

விசாரணைக் கைதி மரணம்..! ’2 நாட்களுக்குள் உடலை பெறுங்கள்... இல்லையென்றால்’..! ஐகோர்ட் கிளை

Thu Sep 22 , 2022
அருப்புக்கோட்டை நகர காவல்துறையின் விசாரணையில் உயிரிழந்ததாகக் கூறப்படும் தங்கப்பாண்டியின் உடலை 2 நாட்களுக்குள் பெற்றுக் கொள்ள உறவினர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்த தங்கமாரி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், “எனது இளைய மகன் தங்கப்பாண்டிக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த 13ஆம் தேதி அருப்புக்கோட்டை நகர காவல்துறையினர் எனது மகனை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். மறுநாள் செப்டம்பர் 14ஆம் […]
202108030231033080 african youth lockup death SECVPF e1653396937152

You May Like