திருப்பதியில் சினிமாவில் நடப்பது போல தன் வாழ்க்கையை தியாகம் செய்துவிட்டு ஆசைக்கணவனை முன்னாள் காதலிக்கு திருமணம் செய்து வைத்த சம்பவம் நடந்துள்ளது.
நெல்லூர் மாவட்டம் டக்கிலியில் உள்ள அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் கல்யாண். கடப்பா மாவட்டத்தைச் சேர்ந்த விமலா என்ற பெண்ணை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சமூக வலைத்தலத்தில் அறிமுகமாகிக் கொண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர் . இவருக்கு திருமணத்திற்கு முன்பே விசாகபட்டிணத்தைச் சேர்ந்த டிக்டாக் பிரபலமான நித்யஸ்ரீ என்ற பெண்ணுடன் காதல் இருந்துள்ளது. அவர்களிடம் தகராறு ஏற்பட்டதால் அந்த காதல் திருமணம் வரை செல்லவில்லை.
கல்யாணும் , விமலாவும் அம்பேத்கர் நகரில் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தி வந்தனர். இந்நிலையில் பழைய காதலில் நித்யஸ்ரீ காதலனை பார்க்க வந்துள்ளார். அப்போதுதான் விமலா என்ற பெண்ணுடன் திருமணமாகியிருப்பது அவருக்கு தெரியவந்தது. தான் மிகவும் அவரை நேசிப்பதாகவும் திருமணம் செய்துகொள்ளுமாறும் நித்யா , கல்யாணிடம் கெஞ்சியுள்ளார். அதே கிராமத்தில் தங்கி விமலாவிடம் கல்யாணை எனக்கு கொடுத்துவிடு என கேட்டுள்ளார்.
தன் கணவர் கல்யாணுக்கும் அந்த பெண்ணின் மீது விருப்பம் இருப்பதை விமலா அறிந்தார். இருந்தாலும் யாரும் நினைத்துப்பார்க்காதபடி அந்த பெண்ணை திருமணம் செய்து வைக்க அனுமதி வழங்கினார். இதையடுத்து நேற்று கிராமத்தில் உள்ள ஒரு கோவிலில் கல்யாணுக்கும் நித்யாவுக்கு திருமணத்தை நடத்தி வைத்தார்.
ஒரே வீட்டில் இரண்டு பெண்களும் ஒன்றாக இருக்க சம்மதம் தெரிவித்ததை அடுத்து கல்யாண் இருவரையும் அழைத்துக் கொண்டு அம்பேத்கர் நகர் வீட்டிற்கு சென்றார். சட்டப்படி குற்றம் என்றாலும் இரண்டு பெண்களும் ஒப்புக் கொண்டதால் சட்டத்தை மீறி குடும்பம் நடத்துகின்றனர்.