ஒரு பெண் எதை வேண்டுமானாலும், பிறருக்கு விட்டுக் கொடுப்பார்.. ஆனால் தனது கணவரை மட்டும் யாருக்காக விட்டுக்கொடுக்க மாட்டார் என்று நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் ஒரு பெண் தனது சகோதரிகளையும் தனது கணவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளார்.. இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் மகிழ்ச்சியாக இருக்கிறார்களாம்.. அந்த சகோதரிகளின் எந்த சண்டை, சச்சரவும் இல்லையாம்.. இதுதொடர்பான வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது..
அந்த வீடியோவில் பேசும் முதல் மனைவி கிறிஸ்டின், தனது நடவடிக்கையால் பெருமைப்படுவதாகவும், 3 பேரையும் தனது கணவர் மிகவும் கவனித்துக்கொள்வதாகவும், அனைவரையும் நன்றாக நிர்வகிப்பதாகவும், மேலும் அனைவரையும் சமமாக நேசிப்பதாகவும் மகிழ்ச்சியுடன் கூறுகிறார்.. ஓம்பேனி மூன்று மனைவிகள் மற்றும் 10 குழந்தைகளுடன் தனது வீட்டில் வசித்து வருகிறார், மிகுந்த வறுமையில் வாடும் ஒம்பேனி, இவ்வளவு பெரிய குடும்பத்தை பராமரிப்பதில் சிரமங்களை எதிர்கொண்டாலும், அனைவரும் திருப்தியாக இருப்பதாகவும் கூறுகிறார்.. Afrimax English என்ற யூ டியூப் சேனலில் இந்த வீடியோ பதிவேற்றப்பட்டுள்ளது..