கேளிக்கை விடுதியில் பெண்ணின் ஆடை கிழித்து; பாலியல் துன்புறுத்தல் செய்த விடுதி செக்யூரிட்டிகள்..!!

டெல்லியின் தெற்கு எக்ஸ்டன்ஷன் பார்ட் – 1 பகுதியில் “கோட்” என்ற தனியார் கேளிக்கை விடுதி இருக்கிறது. இந்த தனியார் கேளிக்கை விடுதிக்கு கடந்த 18-ஆம் தேதி அதிகாலை இரண்டு மணியளவில் ஒரு பெண் தனது நண்பர்களுடன் சென்றுள்ளார். அப்போது, அந்த கேளிக்கை விடுதியில் இருந்த பாதுகாவலர்கள் அந்த பெண்ணையும் அவரது நண்பர்களையும் விடுதிக்குள் செல்ல அனுமதிக்கவில்லை.


இதனால், இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பாட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் அந்த பெண்ணையும் அவரது நண்பர்களையும் கேளிக்கை விடுதி செக்யூரிட்டிகள் கடுமையாக தாக்கியுள்ளனர். அப்போது, கேளிக்கை விடுதியின் மேலாளரும், விடுதி செக்யூரிட்டி இரண்டு பேரும் சேர்ந்து அந்த பெண்ணின் ஆடையை கிழித்து மானபங்கப்படுத்தியுள்ளனர். மேலும், அந்த பெண்ணிடம் பாலியல் ரீதியில் தகாத முறையில் நடந்து கொண்டுள்றனர்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கேளிக்கை விடுதி ஊழியர்கள் தாக்கியதில் அதிர்ச்சியடைந்த அந்த பெண் மனநல பாதிப்புக்கு உள்ளானார் எனவே,‌ அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைகாக சேர்க்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

1newsnationuser5

Next Post

சண்டையை தடுத்த பள்ளி முதல்வரை துப்பாக்கியால் சுட்ட பிளஸ்2 மாணவன்..!! பயங்கர சம்பவம்..!

Sun Sep 25 , 2022
மாணவர்களுக்கு இடையேயான சண்டையை தடுத்த பள்ளி முதல்வரை, மாணவன் ஒருவன் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் சீதாபூரின் பள்ளியொன்றில் 12ஆம் வகுப்பு படிக்கும் சக மாணவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அப்போது, அங்கு வந்த பள்ளி முதல்வர் ராம் சிங் வர்மா, சண்டையிட்டுக் கொண்டிருந்த மாணவர்களைச் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார். அப்போது, பிளஸ்2 மாணவன் ஒருவனைப் பள்ளி முதல்வர் திட்டியதாகச் கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த […]

You May Like