ஒரே ஆண்டில் கசந்து போன திருமண வாழ்க்கை.. பிரபல நடிகை சுகன்யா இப்ப எப்படி இருக்காங்க தெரியுமா..?

90களில் தமிழ் சினிமாவில் முன்னணியில் இருந்த நடிகைகளில் சுகன்யாவும் ஒருவர்.. பாரதிராஜாவின் புது நெல்லு புது நாத்து படத்தின் மூலம் அறிமுகமான சுகன்யா, சின்ன கவுண்டர், திருமதி பழனிசாமி, செந்தமிழ் பாட்டு, சின்ன மாப்பிள்ளை, வால்டர் வெற்றிவேல், மகாநதி, இந்தியன் என தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்திருந்தார்..

suganya cinemapettai

சுகன்யா என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது, சின்னக் கவுண்டர் படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சி தான்.. அந்த படத்தில் சுகன்யாவின் தொப்புளில் விஜய்காந்த் பம்பரம் விடுவார்.. கிளாமராக நடித்தது மட்டுமின்றி, குடும்பப் பாங்கான கதாப்பாத்திரங்களிலும் நடித்து அன்றைய இளைஞர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார்..

அடுத்தடுத்து தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளிலும் 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.. விஜய்காந்த், சத்யராஜ், கமல்ஹாசன், பிரபு, கார்த்தி அன்றைய முன்னணி ஹீரோக்கள் அனைவருடனும் ஜோடி சேர்ந்து நடித்தார்.. மேலும் திரைப்படங்களில் குணச்சித்திர கதாப்பாத்திரங்களிலும், சீரியல்களிலும் நடிக்க தொடங்கினார்..

பின்னர் நடிகை சுகன்யா, 2002ல் ஸ்ரீதர் ராஜகோபாலை திருமணம் செய்து கொண்டார்.. ஆனால் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அடுத்த ஒரு ஆண்டிலேயே விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டார்.. திரைப்படங்கள், சீரியல்களில் நடிக்க கூடாது என்று அவரது கணவர் கண்டிஷன் போட்டதாலும், படப்பிடிப்பு முடிந்து வீட்டுக்கு வரும் போது தினம், தினம் சந்தேகப்பட்டு கேள்விகள் எழுப்பியதாலும் ஒத்துவராது என்று முடிவெடுத்து பிரிந்துவிட்டாராம்.. பின்னர் 2-வது திருமணமும் செய்து கொள்ளவில்லை.. சுகன்யாவுக்கு குழந்தைகளும் இல்லை..

22 632d46ffbfbfe

எனினும் தற்போது 52 வயதாகும் சுகன்யா இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் உடல் எடை குறைத்து படு ஸ்டைலாக மாறியுள்ளார்.. அவரின் சமீபத்தில் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன..

RUPA

Next Post

வீடு புகுந்து சிறுமி கற்பழிப்பு: பா.ஜ.க இளைஞரணி நிர்வாகி போக்சோ சட்டத்தின் கீழ் கைது..!

Tue Sep 27 , 2022
கேரள மாநிலம், பாலக்காடு அருகேயுள்ள மலம்புழா பகுதியை சேர்ந்தவர் 15 வயது. இவர் அதே பகுதியிலுள்ள பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் சிறுமிக்கு அவப்போது வயிற்று பகுதியில் வலி ஏற்பட்டுள்ளது. இதனால் கவலையடைந்த சிறுமியின் பெற்றோர் அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். மருத்துவமனையில் ஸ்ந்த சிறுமியை மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது போது அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து குழந்தைகள் […]
பாலியல் வழக்கு..!! பர்கர் வாங்கித் தர குற்றவாளிக்கு நீதிமன்றம் உத்தரவு..!!

You May Like