ராஜஸ்தானில் 8 பேர் கொண்ட கும்பல் 8ம் வகுப்பு மாணவியை கொடூரமாக பலாத்காரம் செய்து பணம் கேட்டு மிரட்டிய கும்பலை இதுவரை போலீஸார் கைது செய்யவில்லை.
ராஜஸ்தான் மாநிலம் பிவாடி பகுதியில் 8ம் வகுப்பு படித்து வரும் பள்ளி மாணவி கடந்த சில மாதங்களுக்கு முன்பு 2021ம் ஆண்டு பாலியல் பலாத்காம் செய்யப்பட்டார். அதை வீடியோவாக எடு்தது வைத்துக் கொண்ட நபர்கள் சிறுமியிடம் பணம்கேட்டுள்ளனர். இல்லை என்றால் வீடியோவை இணையதளத்தில் விட்டு விடுவேன் என மிரட்டியுள்ளனர்.
முதல் முறையாக ரூ.50000 பணத்தை கொடுக்க வந்தபோதும் அந்தநபர்கள் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அதையும் வீடியோ எடுத்துக் கொண்டு மேலும் மேலும் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். ஒரு கட்டத்தில் தன்னிடம் பணம் இல்லாததால் அவள் பணத்தை கொடுக்கவில்லை. இதனால் அந்த சிறுமியின் வீடியோ மற்றும் புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டனர். இதைப்பார்த்த பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்தனர். அப்போதுதான் இந்த விஷயம் பெற்றோர்களுக்கு தெரியவந்துள்ளது. வீடியோ சமூக வலைத்தலங்களில் வெளியானதை அடுத்து போலீசில் அவர்கள் புகார் அளித்தனர்.
போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த சிறுமியின் ஊருக்கு பக்கத்து ஊரில்தான் அந்த நபர்கள் வசித்து வருகின்றனர். நன்கு அறிந்தவர்கள்தான் இது போன்ற குற்றங்களில் ஈடுபட்டுள்ளனர். குற்றவாளிகள் தலைமறைவாக உள்ளதாகவும் விரைவில் கைதுசெய்யப்படுவார்கள் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.