ரயில் நிலையங்களின் நடைமேடை கட்டணம் உயர்வு… சென்னையில் இன்று முதல் அமலுக்கு வந்தது…!

சென்னை சென்ட்ரல், எழும்பூர் போன்ற எட்டு ரெயில் நிலையங்களில் இன்று முதல் நடைமேடை கட்டணம் உயர்த்தப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.


அதன்படி, சென்னை சென்ட்ரல்,எழும்பூர், தாம்பரம், காட்பாடி, செங்கல்பட்டு, அரக்கோணம், திருவள்ளூர், ஆவடி ஆகிய எட்டு ரயில் நிலையங்களின் நடைமேடை கட்டணம் இன்று முதல் அதிகரித்துள்ளது. விழாக்காலங்களில் ரயில் நிலையங்களில் கூட்டத்தை தவிர்க்கும் பொருட்டு ரயில் நிலையங்களின் நடைமேடை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

ரயில் நிலையங்களின் நடைமேடை கட்டணம் 10 ரூபாயிலிருந்து 20 ரூயாயாக உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த கட்டண உயர்வு வருகிற 2023-ஆம் வருடம் ஜனவரி 31-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

1newsnationuser5

Next Post

பெரும் சோகம்... முன்னாள் அமைச்சர் உடல் நலக்குறைவால் காலமானார்...! அரசியல் தலைவர்கள் இரங்கல்...!

Sun Oct 2 , 2022
கேரள முன்னாள் உள்துறை அமைச்சருமான கொடியேரி பாலகிருஷ்ணன் காலமானார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், கேரள முன்னாள் உள்துறை அமைச்சருமான கொடியேரி பாலகிருஷ்ணன் சனிக்கிழமை இரவு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 69. கடந்த சில நாட்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். நேற்று சிகிச்சை பலனின்றி காலமானார். மார்க்சிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினரான பாலகிருஷ்ணன் 2015 முதல் 2022 வரை மார்க்சிஸ்ட் […]
1097523 kodiyeri balakrishnan cpim

You May Like