30 நாட்களுக்குள்..!! தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் அறிவிப்பு..!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு தீபாவளி பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது.


நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலம் ஏழை எளிய மக்களுக்கு இலவச அரிசி, குறைந்த விலையில் மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி, அரசின் நலத்திட்ட உதவிகளும் இதன் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் பயனடைந்து வருகின்றனர். மேலும், ஒவ்வொரு பண்டிகையின் போதும் மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலமாக அந்தந்த பண்டிகைக்கு ஏற்றார் போல பரிசுத் தொகுப்பும் வழங்கப்படுகிறது. குறிப்பாக, தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.

30 நாட்களுக்குள்..!! தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் அறிவிப்பு..!!

இந்நிலையில், தீபாவளி பண்டிகை முன்னிட்டு மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு பரிசு தொகுப்பு வழங்குவதற்கு மாநில அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி ரூபாய் 100 மதிப்பிலான ஒரு கிலோ ரவை, பருப்பு, நிலக்கடலை, சமையல் எண்ணெய் மற்றும் மஞ்சள் ஆகியவை அடங்கிய பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையும் அம்மாநில அரசு வெளியிட்டுள்ளது. இந்த திட்டத்தின் படி 30 நாட்களுக்குள் ஏதேனும் ஒரு நாளில் அரசின் இந்த சலுகையை மக்கள் பெற்று பயனடையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

CHELLA

Next Post

மகனை விவாகரத்து செய்வதால் மருமகள்சுட்டுக் கொலை ….

Sat Oct 8 , 2022
அமெரிக்காவில் தன் மகனை விவாகரத்து செய்வதால் மருமகளை மாமனால் சுட்டுக் கொன்றார். அமெரிக்காவின் கலிபோர்னியாவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்திய வம்சாவளியை சேர்ந்தவரான சிதல் சிங்  அவரது மருமகள் குர்ப்ரீத் கவுர் என்பவரை அவர் வேலை பார்க்கும் அலுவலகத்தின் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் வைத்து சுட்டுக் கொலை செய்தார். கடந்த வாரம் இச்சம்பவம் நடந்த நிலையில் வெள்ளிக்கிழமை அவருடைய காரில் சடலமாக மீட்கப்பட்டார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை […]
துப்பாக்கி

You May Like