ஹிஜாப் வழக்கில் மாறுபட்ட தீர்ப்பை வழங்கிய சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள்..!! முழு விவரம் உள்ளே..!!

கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணியக்கூடாது என்ற கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு உச்சநீதிமன்ற இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கியிருக்கிறது.


கர்நாடக நீதிமன்ற தீர்ப்பு…

ஹிஜாப் அணிந்து வருவது என்பது இஸ்லாமிய மதத்தில் அடிப்படையான விஷயம் அல்ல என்றும் சீருடை விவகாரத்தில் சில குறிப்பிட்ட கட்டுப்பாடுகளை விதிப்பது என்பது அடிப்படை உரிமைகளை பறிக்கும் செயல் கிடையாது எனவும் சீருடை விவகாரங்களில் உரிய அறிவுறுத்தல்களை வழங்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் இருக்கிறது என கர்நாடகா உயர்நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் தீர்ப்பு வழங்கியிருந்தது. கர்நாடக மாநிலத்தில் கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிந்து வர தடை விதித்த அம்மாநில அரசின் உத்தரவுக்கு எதிரான வழக்கின்போது தான் கர்நாடக உயர்நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியிருந்தது.

ஹிஜாப் வழக்கில் மாறுபட்ட தீர்ப்பை வழங்கிய சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள்..!! முழு விவரம் உள்ளே..!!

உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு…

கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக இஸ்லாமிய மாணவிகள் சிலர் சார்பாகவும் அகில இந்திய இஸ்லாமிய தனிச் சட்ட வாரியம் சார்பாகவும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதி ஹேமந்த் குப்தா அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்தது. வழக்கு விசாரணையின் போது, ‘ஆடை அணிவது என்பது அடிப்படை உரிமை என நீங்கள் கூறுவீர்கள். ஆனால், ஆடை இல்லாமல் இருப்பதும் அடிப்படை உரிமை ஆகும். சிலுவை ருத்ராட்சம் போன்றவை மத அடையாளங்கள்தான் அவற்றை அணிந்து கொண்டு மாணவர்கள் கல்வி நிலையங்களுக்கு வரும்போது ஹிஜாபுக்கு மட்டும் ஏன் தடை விதிக்க வேண்டும்’ என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

ஹிஜாப் வழக்கில் மாறுபட்ட தீர்ப்பை வழங்கிய சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள்..!! முழு விவரம் உள்ளே..!!

அப்போது, ‘சிலுவை ருத்ராட்சம் போன்றவை ஆடைக்கு உள்ளே மறைக்கப்படுகின்றது. அவை வெளியே தெரிவதில்லை. அதே நேரத்தில் யாரும் அவர்களுடைய சட்டையை கழற்றி இவற்றை சோதிப்பதில்லை. ஆனால், ஹிஜாப் என்பது வெளியே தெரியக் கூடியதாக இருக்கிறது’ என வழக்கின் விசாரணையின் போது நீதிபதி கூறியிருந்தார்.

அதேபோல, ‘குறிப்பிட்ட ஒரு வகை உடை உடுத்துவதைக் கண்டு மற்றவர்களுக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்படக் கூடாது என்பதே சீருடையின் நோக்கம். அந்த அடிப்படையில் தான் கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிந்து வர தடை விதிக்கப்பட்டது. ஹிஜாப் அணிந்து வர தடை விதிக்கப்பட்டது மதங்களுக்கு அப்பாற்பட்ட நடுநிலையான நடவடிக்கை’ என கர்நாடகா அரசு சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

அதேவேளையில், ‘கல்வி நிலையங்களில் மத அடையாளங்கள் அணிந்து வரக்கூடாது என்பதாக ஒரு அரசு கூறும் பொழுது அது அனைத்து மதத்திற்கும் பொருந்தக் கூடியதாக இருக்க வேண்டும். சீக்கியர்களுக்கு டர்பன் மற்றும் கிர்பன் என இரண்டும் வழங்கும் பாதுகாப்பைதான் இஸ்லாமியர்களுக்கு ஹிஜாப் வழங்குகிறது. கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு பெரும்பான்மை சமுதாயம் சிறுபான்மையினர் மீது எழுதும் தீர்ப்பு போல இருக்கிறது’ மனுதாரர் சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் தீர்ப்பை தேதிக் குறிப்பிடப்படாமல் ஒத்திவைப்பதாக செப்.22ஆம் தேதி அறிவிக்கப்பட்டிருந்தது.

நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு…

இந்நிலையில், ஹிஜாப் விவகாரம் குறித்த வழக்கின் தீர்ப்பை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஹேமந்த் குப்தா மற்றும் சுதான்ஷு துலியா அமர்வு மாறுபட்ட கருத்துகளை கொண்ட தீர்ப்பை வழங்கியிருக்கிறது. அதன்படி, கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்து உத்தரவிட்டிருந்த கர்நாடக உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ஆதரித்து, உறுதி செய்திருக்கும் நீதிபதி ஹேமந்த் குப்தா மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்வதாக கூறியுள்ளார்.

ஹிஜாப் வழக்கில் மாறுபட்ட தீர்ப்பை வழங்கிய சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள்..!! முழு விவரம் உள்ளே..!!

அதே சமயத்தில் ‘ஹிஜாப் அணிந்து வருவதில் எந்த தடையும் இல்லை’ எனக் கூறி கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பையும் அரசின் முடிவையும் ரத்து செய்வதாக நீதிபதி சுதான்ஷு துலியா கூறியுள்ளார். தொடர்ந்து பேசியுள்ள நீதிபதி துலியா, ‘ஹிஜாப் அணிவதற்கு தடை விதிப்பால் மாணவிகளின் கல்வி பாதிக்கப்பட்டு விடக் கூடாது என்பதே என்னுடைய எண்ணம். ஹிஜாபுக்கு தடை விதிப்பதால் அவர்களில் வாழ்வில் என்ன முன்னேற்றம் ஏற்பட்டு விடும்..? மத ரீதியான பழக்க வழக்கங்களில் பிரச்சனை செய்வது உகந்ததுதானா என்ற கேள்வியே எனக்குள் எழுகிறது. கர்நாடக உயர்நீதிமன்றம் இந்த விவகாரத்தை தவறான பாதையில் இட்டுச் சென்றிருக்கிறது.’ எனக் கூறியுள்ளார்.

இதனையடுத்து ஹிஜாப் விவகாரத்தில் இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கியிருப்பதால், தற்போது இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியின் அமர்வுக்கு மீண்டும் பரிந்துரைக்கப்படுவதாகவும் கூடுதல் அமர்வு முன்பு இந்த விவகாரத்தை மாற்றுவது குறித்த முடிவை தலைமை நீதிபதியை எடுப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CHELLA

Next Post

இனி மின் கட்டண சலுகை பெற ஆதார் கட்டாயம்..!! தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு..!!

Thu Oct 13 , 2022
மின் கட்டண சலுகை பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. மின் நுகர்வோருக்கு முதல் 100 யூனிட்கள் இலவசம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. சலுகைகளை பெற விரும்பும் தகுதியான நபர் ஆதார் எண்ணை வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. முன்னதாக, அரசின் பல்வேறு திட்டங்களின் சலுகைகளைப் பெற ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. ஆதார் எண் இல்லாதவர்கள் தங்களுக்கான […]
Secretariat

You May Like