ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் மாணவியிடம் சில்மிஷம் செய்து அவரை ஆட்டோவோடு சேர்த்து இழுத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தின் தானே பகுதியில் 21 வயது கல்லூரி மாணவி ஒருவர் சாலையில் நடந்து சென்றார். அப்போது ஒரு ஆட்டோ ஓட்டுநர் அங்கு வந்து தகாத முறையில் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டார்.
இதனால், அதிர்ச்சி அடைந்த அந்த கல்லூரி மாணவி கத்தி கூச்சல் போட்டார். உடனே அவரது கையை உதறிவிட்டு அங்கிருந்து ஆட்டோ ஓட்டுனர் தப்பிக்க முயற்சிக்கிறார். ஆனால், அந்த ஆட்டோ ஓட்டுனரை வெளியில் பிடித்து இழுக்க பள்ளி மாணவி முயற்சித்த நிலையில் அவர் ஆட்டோவை எடுத்தார்.
இதனால், அந்த பள்ளி மாணவி 500 மீட்டர் தூரம் ஆட்டோவிலேயை இழுத்துச் செல்லப்பட்டு தடுமாறி கீழே விழுந்து காயமடைந்தார். இது குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது போலீசார் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் சம்பந்தப்பட்ட ஆட்டோ ஓட்டுனரை போலீசார் தேடி வருகின்றனர்.