ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கு விசாரணை குறித்து ஆறுமுக சாமி ஆணையத்தின் அறிக்கை வெளியாகியுள்ள நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது பேசிய ஆடியோ ஒன்று வைரலாகி வருகின்றது.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓ.பி.எஸ். தர்ம யுத்தம் மேற்கொண்ட நிலையில் ஆறுமுக சாமி ஆணையம் அமைத்து அரசு உத்தரவிட்டது. 5 ஆண்டுகளுக்கு பின்னர் ஆறுமுக சாமி ஆணைய அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. 600 பக்கத்திற்கும் மேல் உள்ள அந்த அறிக்கையில் 201ம் ஆண்டு சசிகலா மீண்டும் ஜெயலிதாவுடன் இணைந்தார். இருவருக்கும் நல்ல நட்பு இல்லை என கூறப்பட்டது. ஜெயலலிதா மரணத்தில் சசிகலா, கே.எஸ். சிவக்குமார். சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அப்போதைய அமைச்சர் சி.விஜயபாஸ்கர் குற்றம் செய்தவர்களாக முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து ஆறுமுகசாமி ஆணையம் விசாரணைக்கு பரிந்துரைப்பதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில்இருந்தபோது சிகிச்சை பெற்ற ஆடியோ ஆறுமுக சாமி ஆணையத்திடம் மருத்துவர் ஒப்படைத்தார். இந்த ஆடியோ வைரலாகி வருகின்றது. மூச்சுத்திணறல் ஏற்பட்டு இருமி இருமி பேசுவது அதில் பதிவாகி உள்ளது.
அப்போ கூப்பிட்டேன், அப்போ எடுக்கமுடியல என சொன்னீங்க , எல்லாம் ஒன்னுக்கெட ஒன்று நீங்களும் சரியில்லை , எடுக்கமுடியலன்னா விடுங்க , என மருத்துவரிடம் பேசியுள்ளார். இந்த ஆடியோ தற்போது வைரலாகி வருகின்றது.