ஜி.பி. முத்துவுக்கு பதிலாக இந்த நடிகரை களம் இறக்கினால்தான் சரியாக இருக்கும் என்று பிக்பாஸ் குழு கணித்து முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வேகமாக பரவி வருகின்றது.
குடும்பத்தின் மீதும் , மகன்களின் மீதும் அதிக அளவு பாசம் கொண்டிருந்த ஜி.பி. முத்து இனி என்னால் உள்ளே இருக்க முடியாது எனக் கூறி வெளியேறினார். இதுவரை ஜி.பி.முத்துவுக்காகவே மக்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்தனர். உள்ளே நுழைந்தது முதல் காமெடி , சண்டை , அழுகை என அனைத்து கோணங்களையும் அவர் காட்டிவிட்டார். அவர் எடுத்தது தவறான முடிவு என அனைத்து தரப்பினரும் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் ஜி.பி. முத்துவுக்கு இணையான ஒரு நபரை தேர்வு செய்து அடுத்ததாக களம் இறக்க உள்ளதாக பிக்பாஸ் குழு தெரிவித்துள்ளது. அது வேறும் யாரும் இல்லை மன்சூர் அலிகான் தான். அவருக்கு இணையான ஆள் இவர் தான் என பிக்பாஸ் குழு கணித்துள்ளதாம் .
எனவே அடுத்தாக பிக்பாஸ் வீட்டுக்குள் மன்சூர் அலிகான் வருவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது தொடர்பாக மன்சூர் அலிகானிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.