ஒரு MLA-வின் விலை ரூ.100 கோடி..!! ஆளும்கட்சி எம்.எல்.ஏ-க்கள் 4 பேரை விலைக்கு வாங்க பேரம்..!!

தெலங்கானாவில் ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க குதிரை பேர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.


தெலங்கானா மாநிலத்தில் முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் தலைமையில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில், இந்த கட்சியைச் சேர்ந்த 4 சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க குதிரை பேர முயற்சிகள் நடந்திருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. பைலட் ரோஹித் ரெட்டி, காந்தாராவ், பாலாராஜு, பீராம் ஹர்ஸ்வர்தன் ஆகிய 4 எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

ஒரு MLA-வின் விலை ரூ.100 கோடி..!! ஆளும்கட்சி எம்.எல்.ஏ-க்கள் 4 பேரை விலைக்கு வாங்க பேரம்..!!

இந்த பேச்சுவார்த்தை ஹைதராபாத்தில் உள்ள ஒரு வீட்டில் வைத்து இறுதி செய்வதாக இருந்தது. எம்எல்ஏ-க்களை விலைக்கு வாங்குபவர்கள் பண்ணை வீட்டுக்கு வந்தவுடன் ரோஹித் ரெட்டி இதுகுறித்து போலீசாருக்கு தொடர்பு கொண்டு, லஞ்சம் கொடுத்து தங்களை விலைக்கு வாங்க முயற்சிப்பதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து, அங்கு விரைந்த போலீசார், எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க வந்த 3 நபர்களைக் கைது செய்தனர். ஹரியானாவைச் சேர்ந்த சதீஷ் சர்மா, திருப்பதியை சேர்ந்த சிம்மயாஜி, தொழிலதிபர் நந்தகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

ஒரு MLA-வின் விலை ரூ.100 கோடி..!! ஆளும்கட்சி எம்.எல்.ஏ-க்கள் 4 பேரை விலைக்கு வாங்க பேரம்..!!

4 எம்எல்ஏ-க்களில் ஒருவருக்கு 100 கோடி ரூபாயும், மற்ற 3 எம்எல்ஏ-க்களுக்கு தலா 50 கோடி ரூபாயும் தருவதாக ஆசைவார்த்தை கூறியுள்ளனர். இதையடுத்து, பேரம் பேசப்பட்ட 4 எம்.எல்.ஏ.க்களும் முதல்வர் சந்திரசேகர் ராவ் இல்லத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்கள் சந்திரசேகர் ராவிடம் நடந்த சம்பவத்தை விளக்கினர். இவ்விவகாரம் தெலங்கானாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

CHELLA

Next Post

’இதுக்கு ஒரு எண்டே இல்லையா’..!! ரூபாய் நோட்டுகளில் பிரதமர் மோடியின் படம்..!! வலியுறுத்தும் பாஜக..!!

Thu Oct 27 , 2022
பிரதமர் மோடியின் படமும் ரூபாய் நோட்டுகளில் இடம்பெற வேண்டும் என பாஜக எம்எல்ஏ ஒருவர் வலியுறுத்தியுள்ளார். புதிதாக வெளியிடப்படும் ரூபாய் நோட்டுகளில் கடவுள் படங்கள் இடம்பெற வேண்டும் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று தெரிவித்திருந்தார். அவர், பிரதமர் மோடிக்கு விடுத்துள்ள வேண்டுகோளில், இந்தியாவில் புதிதாக வெளியிடப்படும் கரன்சி (ரூபாய்) நோட்டுகளில் கடவுள்களான லட்சுமி மற்றும் விநாயகர் ஆகியோரது உருவங்களை இடம்பெற செய்ய வேண்டும் என மத்திய அரசையும், […]
’இதுக்கு ஒரு எண்டே இல்லையா’..!! ரூபாய் நோட்டுகளில் பிரதமர் மோடியின் படம்..!! வலியுறுத்தும் பாஜக..!!

You May Like