fbpx

பெண்ணின் மருத்தவ செலவுக்கு பிரபல தயாரிப்பாளர் நிதியுதவு.!

தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பாளராக இருந்து வருபவர் கலைபுலி எஸ்.தாணு சமீபத்தில் இவரது தயாரிப்பில் நானே வருவேன் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இதனை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் வாடிவாசல் திரைப்படத்தை தாணு தயாரித்து வருகிறார். இவர் சினிமா மட்டுமல்லாமல் பலருக்கு உதவிகளை செய்து வருவது வழக்கம். அந்த வகையில், சென்னை காவேரி மருத்துவமனையில் 33 வயதுடைய பெண் நுரையீரல் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்த நிலையில், அவருக்கு நிதி உதவி செய்துள்ளார் தாணு. அந்த பெண் இரு வருடங்களாக நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு அவதிக்குள்ளாகி வந்தார். அந்த பெண்ணின் சிகிச்சைக்காக தாணு 5 லட்சம் கொடுத்துள்ளார்.

இதற்கான காசோலை படிவத்தை தாணு காவேரி மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ஐயப்பன் பொன்னுசாமி மற்றும் மனநல மருத்துவரான யாமினி கண்ணப்பன் இருவரிடமும் கொடுத்துள்ளார்.

Rupa

Next Post

சூப்பர் நியூஸ்..!! உதவித் தொகை உயர்வு..!! தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அரசாணை..!!

Fri Oct 28 , 2022
பழங்குடி நலவாரிய உறுப்பினர்களுக்கான விபத்து, கல்வி உள்ளிட்ட நலத்திட்ட உதவித்தொகைகளை உயர்த்தி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பழங்குடியினர் நலவாரிய உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவித் தொகை, இதர நல வாரியங்களால் வழங்கப்படும் உதவித் தொகைக்கு இணையாக உயர்த்தி வழங்கப்படும் என சட்டப்பேரவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அறிவித்தார். இந்நிலையில், இதுதொடர்பாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதில், “தமிழ்நாடு பழங்குடியினர் நல வாரிய […]

You May Like