கவனம் மக்களே…! இந்த தவறை செய்தால் 5 ஆண்டு வரை சிறை தண்டனை பிளஸ் அபராதம் விதிக்கப்படும்…!

தருமபுரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; சுற்றுச்சூழல்‌, வனங்கள்‌ மற்றும்‌ காலநிலை மாற்றம்‌ அமைச்சகம்‌, இந்திய அரசின்‌ மின்னனு கழிவு (மேலாண்மை) விதிகள்‌ 2016ஐ அறிவித்தது, இந்தவிதிகள்‌ அக்டோபர்‌ 1, 2016 முதல்‌ நடைமுறைபடுத்தப்பட்டது.


மின்‌-கழிவு (மேலாண்மை) விதிகள்‌, 2016-ன்கீழ்‌, அங்கீகரிக்கப்பட்ட மின்‌-கழிவுகளை பிரித்தெடுப்போர்‌, மின்‌-கழிவுகளை மறுசுழற்சி செய்பவர்கள்‌ மற்றும்‌ அங்கீகரிக்கப்பட்ட மின்‌- கழிவு புதுப்பிப்பாளர்களால்‌ மட்டுமே மின்கழிவுகளைச்‌ சேகரித்து செயலாக்க முடியும்‌ மேலும்‌ மத்திய மாசுகட்டுபாடு வாரியத்திடம்‌ நீட்டிக்கபட்ட உற்பத்தியாளர்‌ பொறுப்பு சான்றிதழ்‌ பெற்ற உற்பத்தியாளர்கள்‌ மின்‌-கழிவுகளை சேகரித்து அதனை அங்கீகரிக்கப்பட்ட மின்‌-கழிவுகளை பிரித்தெடுப்போர்‌, மின்‌-கழிவுகளை மறுசுழற்சி செய்பவர்கள்‌ மற்றும்‌ அங்கீகரிக்கப்பட்ட மின்‌-கழிவு புதுப்பிப்பாளர்களுக்கு அனுப்ப வேண்டும்‌.

electronics 18512181280 894856 1601387213

மின்னனுகழிவு (மேலாண்மை) விதிகள்‌ 2016, விதி 24-ன்படி நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள்‌ கைவிடப்பட்ட மின்‌-கழிவு பொருட்களைச்‌ சேகரித்து, அங்கீகரிக்கப்பட்ட மின்‌-கழிவுகளை பிரித்தெடுப்போர்கள்‌ அல்லது மின்‌-கழிவுகளை மறுசுழற்சி செய்பவருக்கு அனுப்ப வேண்டும்‌.

முறைசாரா வர்த்தகம்‌, அறிவியல்‌ பூர்வமற்ற செயலாக்கம்‌ மற்றும்‌ மின்கழிவுகளை எரித்தல்‌ போன்ற சம்பவங்கள்‌ பல்வேறு சந்தர்ப்பங்களில்‌ பொதுமக்களின்‌ குறைகளாக பதிவு செய்யப்பட்டுள்ளன. அங்கீகரிக்கப்படாத நிறுவனங்களின்‌ மூலம்‌ மின்‌-கழிவுகளை அறிவியல்‌ பூர்வமற்ற முறையில்‌ பதப்படுத்துதல்‌ மற்றும்‌ எரித்தல்‌ ஆகியவை மனித ஆரோக்கியத்திற்கும்‌, சுற்றுச்சூழலுக்கும்‌ எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகின்றன. இவ்விதிகள்‌ மீறப்பட்டால்‌ மின்‌ பொருள்‌ உற்பத்தியாளர்கள்‌, தயாரிப்பாளர்கள்‌, இறக்குமதியாளர்கள்‌, மின்‌ கழிவு இடமாற்றம்‌ செய்வோர்‌, பிரித்தெடுபோர்‌ மற்றும்‌ மறுசுழற்சி செய்வோர்‌ ஆகியோருக்கு சுற்றுச்சூழல்‌ பாதுகாப்பு சட்டம்‌,1986-ன்‌ கீழ்‌ தமிழ்நாடு மாசுகட்டுபாடு வாரியத்தால்‌ அபராதம்‌ விதிக்கப்படும்‌.

எனவே இவ்வகையான செயல்களில்‌ ஈடுபடும்‌ மின்கழிவு கையாளுபவர்கள்‌ மீது சுற்றுச்சூழல்‌ பாதுகாப்பு சட்டம்‌, 1986 இன்‌ பிரிவு 5-ன்‌ படி அந்நிறுவனத்தை மூடிடவும்‌ அல்லது அந்நிறுவனத்தில்‌ மின்சாரம்‌, நீர்‌ அல்லது வேறு எதேனும்‌ சேவையை நிறுத்தவும்‌ அதிகாரம்‌ வரையறுக்கப்பட்டுள்ளது. மேலும்‌ அச்சட்டத்தின்‌ பிரிவு 15-ன்‌ கீழ்‌ ஐந்து ஆண்டுகள்‌ வரை சிறை தண்டனை அல்லது ஒரு லட்சம்‌ ரூபாய்‌ வரை அபராதம்‌ அல்லது இவை இரண்டும்‌ விதிக்கப்படும்‌.

Vignesh

Next Post

குடல் புண் மற்றும் அல்சர் உள்ளதா? இயற்கையாகவே சரி செய்யலாம்…

Thu Nov 3 , 2022
தற்போதுள்ள பரபரப்பான இயந்திரத்தனமான வாழ்க்கைச் சூழலில் நம்மில் பலரையும் தாக்கி வருவது இந்த வயிற்றுப்புண், குடல்புண் தான். இதை நாகரிகமாக தற்போது அல்சர் என்று சர்வசாதாரணமாக கூறுகிறோம். இது சாதாரண விஷயம் கிடையாது. “இந்த அல்சர் அதிகமானதால் குடலில் ஓட்டை விழுந்து ரத்தக்கசிவுக் கூட ஏற்பட வாய்ப்புள்ளது” என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். நம் உடல் நிலையும் மன நிலையும் சீராக அமைய வேண்டுமென்றால் உணவு மிக மிக அவசியம். இந்த உணவு […]
colon problem

You May Like