முர்ஷிதாபாத் மாவட்ட பகுதியில் சாகர்திகி என்ற கிராமத்தில் அக்டோபர் 25 அன்று அந்த கொடூரம் சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. சிறுமிகள் ஒரே அறையில் தூங்கிக் கொண்டிருந்த நிலையில், திடீரென உள்ளே நுழைந்த ஆண்கள் அவர்களை லெஸ்பியன்கள் என்று குற்றம் சாட்டியுள்ளனர். ஏன் ஒரே படுக்கையை இவர்கள் பகிர்ந்து கொள்கிறார்கள் என்று அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேலும், அந்த மூவரும் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பிக்க முயன்றபோது அவர்களின் அந்தரங்க உறுப்புகளின் மீது இரும்பு கம்பியால் எரிக்க முயன்றுள்ளனர். இது குறித்து பேசிய பெண், என்னுடைய நண்பர் என்னை அழைத்தபோது நான் அங்கு சென்றேன்.
அப்போது என்னை பலாத்காரம் செய்ய முயன்றனர். ஆனால் நான் அதற்கு அனுமதிக்காத காரணத்தினால், என்னை அடித்து மூவரும் தீ குச்சிகள், இரும்பு கம்பிகள் மற்றும் மது பாட்டில்களால் என்னை தாக்கினார்கள் என்று மூன்று பெண்களில் ஒருவர் கூறியிருக்கிறார்.
இந்த நிலையில், அவர்களின் மீது தாக்குதல் நடத்தியவர்களில் பெண் ஒருவரின் உறவினரும் இருந்துள்ளார். இதனை தொடர்ந்து, நவம்பர் 3ஆம் நாள் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்ததின் பேரில் இந்த சம்பவம் பற்றி உண்மை வெளியே வந்துள்ளது. அந்த மூவரில் சாஹேபுல் ஷேக் என்ற ஒருவர் கைது செய்யப்பட்டார். மேலும், மற்றவர்கள் தலைமறைவாக உள்ளனர் என தெரிவித்துள்ளனர்.