இறந்து போன தன் தந்தையின் உயிரை திரும்பக் கொண்டு வரும் வினோதமான முயற்சியில், பெண் ஒருவர் 2 மாதமே ஆன குழந்தையை நரபலி கொடுக்க முயற்சி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி, கிழக்கு கைலாஷ் பகுதியில் ஒரு பெண்ணின் தந்தையை இறந்து போயுள்ளார். தன் தந்தை மீது பாசம் கொண்ட அப்பெண்ணிடம் ஒருவர், இறந்துபோன தந்தையை மீண்டும் உயிர்ப்பிக்க புதிதாக பிறந்த குழந்தையை நரபலி கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதற்கிடையே, சப்தர்ஜங் மருத்துவமனையில் கடந்த வியாழன்கிழமை குழந்தை ஒன்று பிறந்தது. அங்கு ஒரு அறையில் இருந்த குடும்பத்தை சந்தித்து, தன்னை ஒரு தன்னார்வ தொண்டு நிறுவன உறுப்பினர் என்று அந்த பெண் அறிமுகமாகியுள்ளார். பின்பு அந்த மருத்துவமனையில் குழந்தையின் வளர்ச்சியை பரிசோதிப்பதற்காக நர்ஸ் ஒருவர் குழந்தையை எடுத்துச் சென்றார். அந்த நர்சை பின்தொடர்ந்த அந்த பெண், அவரை தாக்கிவிட்டு குழந்தை கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து, போலீசுக்கு புகார் அளிக்கப்பட்டது.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், குற்றம் சாட்டப்பட்டவர் பிறந்த குழந்தையை தியாகம் செய்வதன் மூலம் இறந்த தந்தையை மீண்டும் உயிர்ப்பிக்க முடியும் என்ற மூடநம்பிக்கையில் இதை செய்துள்ளார்.
போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் பெண்ணை சரியான நேரத்தில் பிடித்து குழந்தையை மீட்டனர். குற்றம் சாட்டப்பட்டவர் ஸ்வேதா (25) என அடையாளம் காணப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். விசாரணையில் ஸ்வேதா நரபலி முயற்சி செய்ததை ஒப்புக்கொண்டார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.