மக்களே…! முன்னெச்சரிக்கையாக இதை செய்ய வேண்டும்…! காவல்துறை முக்கிய அறிவிப்பு…!

பருவமழை முன்னெச்சரிக்கை தொடர்பாக காவல்துறையினர் அறிவுரைகளை சென்னை காவல் துறை வழங்கி உள்ளது.

இது குறித்து சென்னை காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; வடகிழக்குப் பருவமழை தொடங்கி அதிக மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் அதிகப்படியான மழை, சூறாவளி போன்ற தவிர்க்க முடியாத சூழ்நிலை உருவாகும் என தெரிவித்துள்ளது. அதனை எதிர்கொள்வதற்காக வீடுகள் மற்றும் குடியிருப்புப்பகுதிகளில் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு சென்னை காவல் துறை சார்பில் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

chennai rains 29102020 4 1200 0

அதன் படி, மழைக்காலங்களில் வீட்டு மொட்டை மாடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழைநீர் தேங்கக்கூடிய பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும். குறிப்பாக சுற்றுப்புறங்களை தூய்மையாக வைப்பதன் மூலம் டெங்கு, மலேரியா போன்ற காய்ச்சல்கள் பரவாமல் இருப்பதைத் தடுக்கலாம். அதேபோன்று மழைக்காலங்களில் மாசுபட்ட குடிநீர்களை பருகுவதன் மூலம் மஞ்சள் காமாலை, டைபாய்டு, காலரா மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது.

ஆகவே, குடிநீரைக் காய்ச்சி வடிகட்டி பருகுவதன் மூலம் இது போன்ற கொடிய நோய்கள் பரவாமல் இருப்பதைத் தடுக்கலாம். இதனிடையே நிலவேம்பு மற்றும் கபசுர குடிநீர் ஆகியவற்றை சேர்த்துப் பயன்படுத்தலாம். அதிகப்படியான மழை பெய்யும் நேரத்தில் வீட்டிற்குத்தேவையான அத்தியாவசியப் பொருட்களான எரிபொருட்கள், மருந்துப்பொருட்கள் மற்றும் உணவுப்பொருட்கள் ஆகியவற்றை முன்கூட்டியே தயார்படுத்தி வைத்துக்கொள்ளலாம்.

வீட்டின் அருகே தேங்கி நிற்கின்ற மழைநீர் மற்றும் சாக்கடை கலந்த நீர் ஆகியவற்றில் குழந்தைகளை விளையாடாமல் பாதுகாத்து கொள்ளலாம். குடியிருப்புப் பகுதியில் அருகில் இருக்கின்ற மின்கம்பங்கள், அருகே தேங்கி நிற்கின்ற மழை நீர் பகுதிக்கு செல்லாமல் இருக்க வேண்டும். அதேபோன்று வீட்டில் இருக்கின்ற சுவர்கள் மழை நீரால் ஊறி இருக்கும் நேரத்தில், அந்த இடத்தில் இருக்கின்ற ஸ்விட்ச் போர்டை பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். காவல் ஆளிநர்கள் மழைக்காலங்களில் காவல் ஆளிநர்கள் பணிக்குச்செல்லும் பொழுது குடை, ரெயின் கோட் மற்றும் கம் பூட்ஸ் ஆகிவற்றை நிச்சயம் பயன்படுத்த வேண்டும்.

தமிழக மக்களே எச்சரிக்கை..!! நவ.11, 12இல் அதிகனமழை பெய்யும்...!! மாவட்டங்களின் விவரங்கள் இதோ..!!

குறிப்பாக, மழை நேரத்தில் சாலைகளில் இருக்கின்ற பாதாள சாக்கடை திறந்து இருக்க வாய்ப்பு இருப்பதால், காவல் ஆளிநர்கள் மிக கவனமுடன், எச்சரிக்கையுடனும் பணியாற்ற வேண்டுமென காவல் துறை சார்பில் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

Vignesh

Next Post

ஆஹா...! வாகன ஓட்டிகளே...! இனி கட்டுப்பாடு இல்லை... ரத்து செய்து அரசு அதிரடி உத்தரவு...!

Mon Nov 14 , 2022
டெல்லியில் காற்று மாசுபாடு சிறிது குறைந்ததை அடுத்து, BS3 பெட்ரோல் வாகனங்கள் மற்றும் BS4 டீசல் கார்கள் இயக்குவதற்கான தடையை டெல்லி அரசு நீக்கியது. இன்று முதல் அனைத்து வகை வாகனங்களும் இயக்கப்படும். கட்டுப்பாடுகள் இல்லை என டெல்லி அரசு அறிவித்துள்ளது. டெல்லி காற்றுத் தரக் குறியீட்டில் முன்னேற்றத்தைக் கவனித்து வருவதால், மெதுவாகவும் படிப்படியாகவும் அரசாங்கம் கடந்த வாரம் செயல்படுத்தப்பட்ட GRAP திட்டத்தில் மாற்றங்களைச் செய்து வருகிறது. கடந்த சில […]
ஆன்லைன் பேமெண்ட்..!! முன்பதிவுகளை ரத்து செய்யும் கேப் ஓட்டுநர்கள்..!! தமிழக அரசு அதிரடி

You May Like