பொதுவாக வரன் பார்க்கும் நிகழ்வின்போது இரு வீட்டாரும் பேசி வைத்து பெண் வீட்டிற்கு மாப்பிள்ளை வீட்டார் வந்து பார்ப்பது வழக்கம். இந்நிலையில் 230 பெண்களை பார்க்க 14,000 பேர் குவிந்தனர்.
கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டத்தில் ஆதிசுஞ்சுனகிரி மடத்தின் சார்பில் ஒரு குறிப்பிட்ட சமுதாய மக்களுக்கு வரன் பார்க்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் 230 பெண்கள் மணமகன் தேவை என இந்த அமைப்பில் பதிவு செய்தனர். இந்த பெண்களை மணக்க விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டது.
இந்நிலையில் இந்நிகழ்வில் 14,000 மாப்பிள்ளைகள் பெண்ணுக்கு விண்ணப்பம் அளிக்க ஜாதகத்துடன் குவிந்தனர். 230 பெண்களை மணக்க 14,000 பேர் விண்ணப்பித்துள்ளார்கள். இது அப்பகுதியில் பரபரப்பானது. இதற்காக வந்திருந்த மாப்பிள்ளை குடும்பத்தினர் என ஆயிரக்கணக்கானோர் மடத்திற்கு வந்து குவிந்த வண்ணம் இருந்தனர்.
முதலில் இது பற்றி அறியாதவர்கள் வேறு ஏதோ நிகழ்வுபோல என நினைத்துக் கொண்டு விசாரித்துவிட்டு சென்றனர். பின்னர் வரன் பார்க்கும் நிகழ்வு என்றதும் பெரும் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியது. தகவல் கேட்ட பின்னரும் பல இளைஞர்கள் விண்ணப்பங்களை கையில் கொண்டுவந்திருந்தது இன்னும் சுவாரஸ்யமானது.