ஊட்டி பகுதியின் அருகே இருக்கும் இத்தலார் கிராமத்தில் அர்ஜுணன் என்பவர் தனது மகன் அபிமன்யுடன் 26, வசித்து வருகிறார். மகன் அதே பகுதியில் உள்ள கூட்டுறவு தேயிலை தொழிற்சாலையில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக பணியாற்றி வந்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று காலை அந்த கிராமத்தின் அருகே உள்ள எமரால்டு என்ற அணைக்கு சென்று குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதனை தொடர்ந்து ஊட்டி சேர்ந்த தீயணைப்பு துறை நிலைய அலுவலர் பிரேமானந்தன் என்பவர் தலைமையில், தீயணைப்பு துறை ஊழியர்கள் அந்த சம்பவ இடத்திற்கு சென்றனர்.
அதன் பின்னர் 2 மணி நேரம் தேடிய நிலையில் போராடி உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து தற்கொலைக்கான காரணம் என்னவென்று எமரால்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.